நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ரயிலில் பயணிப்போரின் பொருட்களை வீடு to ஸ்டேஷன், ஸ்டேஷன் to வீடு பத்திரமாக எடுத்துச் செல்லும் புதிய முறை- இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பொருட்களை வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கும், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கும் பத்திரமாக எடுத்துச் செல்லும் புதிய முறையை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.
புக் பேக்கேஜ் என்ற அமைப்புடன் இணைந்து இதற்கான செயலியை உருவாக்கிட ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. என்ட் டூ என்ட் எனப்படும் இந்தச் சேவை மூலம் பயணிகள் தங்கள் சுமைகளை சுமந்து செல்லும் அவசியம் இருக்காது என்றும் ரயில்வே துறை கருதுகிறது.

IRCTC மூலம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் முடக்கப்பட்ட ரயிலில் உணவு வழங்கும் சேவை விரைவில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் தொடங்கும் என IRCTC அறிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!