நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நூலிழையில் உயிர்தப்பிய துனீஷிய நாட்டு அதிபர்.

 
கடிதத்தில் விஷம் தடவி கொலை செய்ய நடைபெற்ற முயற்சியில் துனீஷிய நாட்டு அதிபர் நூலிழையில் உயிர்தப்பினார்.
துனீசிய அதிபர் கைஸ் சையதுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று, அவரது உதவியாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

யார் அனுப்பியது என்ற முகவரி இல்லாததால், அதிபரிடம் கொடுக்கமால் தானே பிரித்துப் பார்த்தபோது அதில் ஏதும் எழுதப்பட்டிருக்கவில்லை.

ஆனால் உடனடியாக நிலைகுலைந்து விழுந்த அவருக்கு பார்வை இழப்பு, தலைவலி ஏற்பட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது அருகில் இருந்த மற்றொரு அதிகாரிக்கும் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே துனீஷிய உள்துறை அமைச்சகம் கடிதத்தை ஆய்வு செய்ததில், விஷம் தடவப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக துனீஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!