நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Health News: வெந்தயத்தின் நன்மைகள், பயன்பாடு, பக்கவிளைவுகள் என்ன தெரியுமா?

 வெந்தயம் என்ற பெயர் நாம் தினசரி கேட்பது என்பதால் அதன் உண்மையான பயன்கள் தெரியாமல் அதை சாதாரணமாக நினைத்துவிடுகிறோம். வெந்தயம், உணவுப்பொருள் (Food) மட்டுமல்ல, மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து புரதச்சத்து, கொழுப்பு சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

வெந்தயம் என்ற பெயர் நாம் தினசரி கேட்பது என்பதால் அதன் உண்மையான பயன்கள் தெரியாமல் அதை சாதாரணமாக நினைத்துவிடுகிறோம். வெந்தயம், உணவுப்பொருள் (Food) மட்டுமல்ல, மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து புரதச்சத்து, கொழுப்பு சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.


வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். வறட்சியை அகற்றும் தன்மை கொண்டது. வெந்தயத்தில் உள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். வெந்தயத்திலுள்ள எண்ணை பசை, தலைமுடிக்கு (Hair) வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும், விதைகள் சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தின் நன்மைகளும் அது நம்மை நோயை அண்டவிடாமல் காக்கும் பண்பு பற்றியும் தெரியுமா? 

வெந்தயத்தில் அதிக அளவிலான நார்சத்து உள்ளது. சர்க்கரை நோயாளிகளின் (Diabetics) ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் (Blood Sugar), ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றது. வெந்தயத்தை சமைத்தாலும், அப்படியே சாப்பிட்டாலும் இந்த பலன் கிடைக்கும்.  சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, நல்ல பலனைக் கொடுக்கும்.  

வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் (Water) ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். அல்லது பொடியாக இடித்து தண்ணீர் அல்லது மோரில் (Butter Milk) கலந்து குடிக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை வெந்தயத்தை உட்கொள்ளலாம். வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்ச்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். 

ALSO READ :   வெந்தயம், கற்றாழை, தயிர்… இதைவிட நல்ல தீர்வு இல்லை!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!