நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

2 கோடி ஆண்டுகளுக்குப் பிறகும் உயிர்த்திருக்கும் அதிசய மரம்.

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எரிமலைகள் நிறைந்த லெஸ்போஸ் தீவில் ஒரு புராதன மரத்தை கிரேக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மரம் 2 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக இருப்பினும் அதன் வேர்கள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் வியக்கின்றனர்.

சாலைப்பணிகளுக்காக பழைமை வாய்ந்த வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்பட்ட போது இந்த அதிசய மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் கிளைகளும் வேர்களும் வலிமையுடன் இருப்பதைக் கண்டு மீண்டும் இடத்தில் அதனை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வனப்பகுதி உலகத் தொல்பொருள் பாதுகாப்பு அமைப்பான யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. ஆனால் எரிமலை வெடித்ததால் அப்பகுதி முழுவதும் இந்த மரம் உள்பட சாம்பல் பூத்து காணப்பட்டது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!