நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ரஷ்யாவில் பனியாக உறைந்து போன கடலில் சிக்கிய மீனவர்கள் மீட்பு.

ரஷ்யாவில் பனியாக உறைந்து போன கடலில் சிக்கிய மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு அருகே உள்ள பின்லாந்து வளைகுடா பகுதியின் கடும் குளிர் காரணமாக அப்பகுதியில் உள்ள கடல் பனியாக உறைந்து போனது.

இதில் ஏராளமான மீனவர்கள் சிக்கித் தவித்து வந்தனர். இந்நிலையில் அவர்களை மீட்பதற்காக பனிக்கட்டியை உடைத்துச் செல்லும் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போது கப்பல் கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்றதைக் கண்ட மீனவர்கள் அங்கிருந்து ஓடிச் சென்று தப்பினர்.
பின்னர் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய ஹோவர்கிராஃப்ட் என்ற படகு மூலம் மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!