நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

திரையரங்குகளில் இன்று முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி.


திரையரங்குகளில் இன்று முதல் நூறு சதவீத இருக்கைகளையும் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திரையரங்குகளில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது உள்ளிட்டவை கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்க கட்டணங்களை பெறுவதற்கு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நுழைவு வாயில், வெளியே செல்லும் பகுதி உட்பட திரையரங்குகளின் முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி வைக்க வேண்டும், இடைவேளைகளில் கூட்டமாக எழுந்து செல்வதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!