நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

யானையால் கொல்லப்பட்ட ஆசிரியை... ஆபத்தில் முடிந்த டென்ட் கேம்ப்! காட்டுக்குள் நடக்கும் விதி மீறல்கள்.

 
சமீபத்தில் கேரளாவில் டென்ட் கேம்ப் என்ற போர்வையில் காட்டுக்குள் தங்கியிருந்த ஆசிரியை காட்டு யானையால் மிதித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு, டென்ட் கேம்ப் எனும் பெயரில் காட்டுக்குள் நடக்கும் விதிமீறல்கள் வெளியே தெரிய வந்துள்ளன.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் செலிரி பகுதியை சேர்ந்தவர் 26 வயதேயான சகானா. இவர், அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன்பு சகானா வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி என்ற இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுக்குள் உள்ள ரிசார்ட்டுக்கு தன் தோழிகளுடன் சென்றுள்ளார். இரண்டு சிறிய கட்டங்கள் கொண்ட இந்த ரிசார்ட்டை ஒட்டிய காட்டுப் பகுதிக்குள் 10 டென்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்தான், சகானா தங்கியிருக்கிறார். இரவு நேரத்தில் டென்டை விட்டு சகானா வெளியே வந்த போது, அங்கே நின்றிருந்த காட்டு யானை ஒன்று அவரை மிதித்து கொன்று விட்டது. சகானாவில் அலறல் சத்தம் கேட்டு மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். பிறகு, சகானாவின் உடல் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த ரிசார்ட், முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, வயநாட்டில் செயல்பட்டு வந்த ஏராளமான ரிசார்ட்களை மாவட்ட ஆட்சியர் அதீலா அப்துல்லா உடனடியாக மூட உத்தரவிட்டார். பொதுவாகவே, உதகை- மசினகுடி- வயநாடு வனப்பகுதிகளுக்குள் கணக்கிலடங்காத ரிசார்ட்டுகள் அனுமதியில்லாமல் செயல்பட்டு வருகின்றன. மசினகுடியிலும் ஒரு யானை உயிரை பறி கொடுத்து சட்டத்துக்குப் புறம்பான ரிசார்ட்டுகளை மூட வைத்தது என்றால், வயநாட்டில் சகானா பலியான சம்பவத்தால் ரிசர்ட்டுகள் மூடப்பட்டுள்ளன.
பொதுவாகவே நகரப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு வனம், வனம் சார்ந்த பகுதிகளில் சென்று தங்குவது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கும். குறிப்பாக, பணக்காரர்கள் டிராவல்லிங் செல்வதில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்காக, எவ்வளவு பணம் செலவழிக்கவும் தயாராக இருப்பார்கள். நகர்ப்புறவாசிகளின் இந்த ஏக்கத்தைப் பயன்படுத்தி சோசியல் மீடியாக்களில் டென்ட் டூரிசம் என்ற பெயரில் விளம்பரங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை டென்ட் ரிசார்ட் உரிமையாளர்கள் ஈர்க்கின்றனர். ஆனால், இந்த டெண்ட் கேம்ப்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பூஜ்யமே.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!