நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வூகானில் கொரோனா எப்படி உருவானது என்ற ஆராய்ச்சியை தொடங்கியது உலக சுகாதார அமைப்பு.

சீனாவின் வூகான் நகரில் கொரோனா தொற்று எப்படி உருவானது என்பது தொடர்பான ஆராய்ச்சியை உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழு தொடங்கியுள்ளது.
பல்வேறு தடைகளை தாண்டி வூகானில் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு கள ஆய்வைத் தொடங்கியுள்ள வல்லுநர் குழு, அங்குள்ள ஆய்வகங்கள், சந்தைகள் மற்றும் மருத்துவமனைகளை பார்வையிட திட்டமிட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், வூகானில் இரண்டு வாரங்கள் ஆய்வு செய்யவுள்ள வல்லுநர் குழு, கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்து பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!