நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அனைத்து இந்தியர்களுக்கும் விசா வழங்கப்படும் என ரஷ்ய தூதரகம் அறிவிப்பு.

இந்திய குடிமக்கள் யாவருக்கும் விசா வழங்கும் நடவடிக்கையை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது.
மாணவர்கள் விசா உள்பட அனைத்து வகை விசாக்களும் வழங்கப்படுவதாக டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் விமான சேவையை மீண்டும் தொடங்கவும் ரஷ்யா கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.

மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கும் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கும் தற்போது வாரம் இருமுறை விமான சேவை இயக்கப்பட இருக்கிறது.

விசாவுக்கு விண்ணப்பம் செய்வோர் தேவையான ஆவணங்களை ரஷ்ய தூதரக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அத்துடன் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்றிதழ் பெற்றும் பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!