நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விவசாயிகள் போராட்டம்; டெல்லி எல்லையில் 2 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி,

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.,2 மாதங்களுக்கு மேலாக அவர்களது போராட்டம் நீடித்தபடி உள்ளது. மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் 11 தடவை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்தப்படி உள்ளது.

இந்தநிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 500 போலீசார் காயமடைந்தனர். 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதுதொடர்பாக டெல்லி போலீசார் 33 வழக்குகள் பதிவு செய்து விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீசு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். இது விவசாயிகளை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

விவசாயிகளை எல்லையில் இருந்து காலி செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதோடு விவசாயிகள் மேலும் திரண்டு வருமாறு அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதைஏற்று பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டு உள்ளனர். இன்றும், நாளையும் 3 லட்சம் பேரை கூடுதலாக திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு வரும் நிலையில் விவசாயிகளும் தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி வருகிறார்கள். மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக விவசாய சங்க தலைவர்கள் அறிவித்தனர். அதன்படி இன்று காலை 9 மணிக்கு விவசாயிகள் உண்ணாவிரதம் தொடங்கியது.

மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. அடுத்தகட்ட போராட்டம் பற்றி இன்று இரவு ஆலோசனை நடத்தி அறிவிப்போம் என்று விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் டெல்லி புறநகரில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையே காணப்படுகிறது. 

இந்த நிலையில், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி ஆகிய டெல்லியின் எல்லைப் பகுதிகளில் 2 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 31-ஆம் தேதி இரவு 9 மணி வரை இணைய சேவை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!