நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகிற்கே தற்போது இந்தியா முன் உதாரணமாக உள்ளது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது
குடியரசுத் தலைவர் 
ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்

ஆண்டின் முதல் கூட்டம் - ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்

எதிர்கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்தன

கொரோனா சூழலில் நாடாளுமன்றம் கூடியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது

குடியரசுத் தலைவர் உரை

அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது

எந்த ஒரு சவாலும் இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது

நிலநடுக்கம், புயல்களை மட்டும் அல்ல கொரோனாவையும் இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது

உலகிற்கே தற்போது இந்தியா முன் உதாரணமாக உள்ளது

அனைத்து சவால்களையும் இந்தியா ஒருங்கிணைந்து எதிர்கொண்டு வருகிறது

கொரோனா காலத்தில் உரிய நேரத்தில் இந்தியா எடுத்த முடிவு பெரும் அசம்பாவிதங்களை தவிர்த்தது

இந்தியாவில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது

கொரோனா காலத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் பலன் கொடுத்தது

கொரோனா சூழலிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்தது

கொரோனா காலத்தில் இந்தியாவில் ஒருவர் கூட பசியால் தவிக்கவிடப்படவில்லை.

கொரோனா கவச உடை முதல் கொரோனா பரிசோதனை கருவி வரை இந்தியா தன்னிறைவு பெறும் வகையில் செயல்பட்டது

கொரோனா காலத்தில் இந்தியர்களுக்காக என்று இல்லாமல் உலக மக்களின் நன்மைக்காக இந்தியா பணியாற்றியது

சுயசார்பு இந்தியா என்கிற முழக்கம் எவ்வளவு அவசியமானது என்பதை கொரோனா உணர்த்தியுள்ளது

நாடு முழுவதும் 1.5 கோடி ஏழை எளிய மக்கள் இலவசமாக மருத்துவ வசதிகளை பெற்று வருகின்றனர்

சுயசார்பு அவசியம் - ராம்நாத் உரை

நாடு முழுவதும் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது

வேளாண்துறையை நவீனப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் கூடுதல் பலன் அடைய முடியும்

கொரோனா சூழலிலும் வேளாண் பொருட்களின் உற்பத்தி புதிய உச்சத்தை தொட்டது

வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது

மத்திய அரசின் சுகாதார கொள்கைகளால் ஏழைகள் குறைந்த விலையில் மருந்துகளை பெற முடிகிறது

பிரதமரின் உழவர் நிதி உதவித்திட்டம் மூலம் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.1லட்சம் கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது

வேளாண்துறையை நவீனமயமாக்க கடந்த காலங்களில் அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.


 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!