நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆண் நண்பர் இல்லையென்றால் கல்லூரிக்கு வரக்கூடாது.. அதிர்ச்சி அடைந்த மாணவிகள்..

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் பெயரில் நோட்டீஸ் ஒன்று பரவி வந்தது.
அதில், வரும் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாணவிக்கும் குறைந்தது ஒரு ஆண் நண்பர் இருக்கவேண்டும் என்றும், இது பாதுகாப்பு கருதி தெரிவிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், ஆண் நண்பர்கள் இல்லாத மாணவிகள் யாரும் பிப்ரவரி 14க்கு பின்னர் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள், இந்த விஷயத்தை கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றனர்.

அதன்பிறகே, இது போலியாக வலம் வரும் நோட்டீஸ் என்றும், கல்லூரியின் பெயரை குலைப்பதற்கு செய்யப்பட்ட சதி என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த நோட்டீசை புறக்கணிக்குமாறும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!