நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மத்திய அரசின் தடையை அடுத்து இந்தியப் பிரிவை மூடியது டிக்டாக் நிறுவனம்..! 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவிப்பு.

சீனாவின் டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் தனது கிளையை மூடுவதாக அறிவித்துள்ளதால் அதில் பணியாற்றிய 2 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறி டிக்டாக் உள்ளிட்ட ஏராளமான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில் டிக்டாக் நிறுவனம் தனது இந்திய ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், இந்தியாவில் மீண்டும் டிக்டாக் பயன்பாட்டுக்கு வரும் என தாங்கள் நம்புவதாகவும், ஆனால் அதற்கான கால அளவீடு தெரியாததால் இந்தியக் கிளையை மூடுவதாகவும் அறிவித்துள்ளது.

டிக்டாக்கின் இந்த முடிவால் அதன் இந்தியப் பிரிவில் பணியாற்றிய 2 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!