நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

'குட்பை' சொல்லிவிடுமா 'கூகுள்?'

 


'கூகுள்' நிறுவனம், ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என்று கூறியிருக்கிறது. காரணம், ஆஸ்திரேலியா கொண்டுவர இருக்கும் புதிய சட்டம் தான்.


கூகுள், பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள்,ஊடகங்களின் செய்திகளை பயன்படுத்துவதால், அவற்றுக்கு ராயல்டி தொகை வழங்க வேண்டும் என்கிறது, இந்த புதிய சட்டம்.ஆனால் இதை கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஏற்க மறுக்கின்றன. கூகுள் ஒருபடி மேலே போய், 'ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறிவிடுவோம்' என சொல்லி இருக்கிறது. ஆஸ்திரேலியாவோ, சட்டத்தை கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறது.



செய்திகளைப் படிக்க விரும்பும் மக்கள் மூலம், தங்களுக்கான வாடிக்கையாளர்களை, கூகுள் போன்ற நிறுவனங்கள் பெறுகின்றன. எனவே அவை ஒரு குறிப்பிட்ட தொகையை, ஊடகத் துறைக்குக் கொடுக்க வேண்டும் என்கிறது, ஆஸ்திரேலிய அரசு.ஆஸ்திரேலிய அச்சு ஊடகங்களின் விளம்பர வருவாய், கிட்டத்தட்ட, 75 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. பல நிறுவனங்களில் ஊழியர்கள்எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, ஆஸ்திரேலிய அரசு இத்தகைய சட்டத்தை கொண்டுவர முடிவெடுத்துள்ளது.



ஆனால், ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, 90 - 95 சதவீதம் பேர் கூகுள் தேடுபொறியையே அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். அதனால், கூகுள் அந்நாட்டைவிட்டு வெளியேறிவிடுவோம் என்கிறது.இவ்விவகாரத்தில், அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய, உலக நாடுகள் அனைத்துமே காத்துக்கொண்டிருக்கின்றன.



AKSO READ :    தென் ஆப்ரிக்கா முன்னால் அதிபர் திரு நெல்சன் மண்டேலா கூறியதாவது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!