நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் மக்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கும் -பிரதமர் மோடி.

நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் மக்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாகவும் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மினி பட்ஜெட்களின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள் இருக்கும் என்று சூசகமாக பிரதமர் மோடி குறிப்புணர்த்தியுள்ளார். கடந்த ஆண்டில் கொரோனா பேரிடர் காலத்தில் சிறிய மினி பட்ஜெட்களில் நிதித்தொகுப்புகள் அறிவிக்கப்பட்டன.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!