நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அதிகமாகப் பரவுவதால் ஆபத்தானதாகத் திரிபடையும் கொரோனா வைரஸ்... நமக்கிருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே!

 
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மரபியல் ரீதியாகத் திரிபடைந்து அதிவேகமாகப் பரவி வருகிறது. வைரஸ்கள் தன்னைத் தானே நகல் எடுத்து பல்கிப் பெருகும் போது அதன் மரபியல் கூறுகளில் ஏதாவது மாற்றம் நடந்துகொண்டே இருக்கும். கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவும்போது, கொரோனா வைரஸின் பிறழ்வுகளுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். காலப்போக்கில் இந்த பிறழ்வு அபாயகரமானதாக மாறிவிடும்.
இந்த நிலையில், கொரோனா வைரசின் ஆபத்தான திரிபைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 8 - ம் தேதி கனடாவின் ஒண்டாரியோவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஊழியர் ஒருவருக்குக் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்த இரண்டு வாரங்களில் முதியோர் இல்லத்தில் இருந்த 127 பேரை கொரோனா தாக்கியதில் 32 பேர் பரிதாபமாக இறந்தனர். 
கொரோனா வைரஸின் மாதிரியை சோதனை செய்தபோது, இங்கிலாந்திலிருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!