நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஜப்பானில் 10 ஆண்டுகளாக தாயின் இறந்த உடலை பிரீசரில் மறைத்து வைத்து பாதுகாத்து வந்த பெண்.

ஜப்பானில் 10 ஆண்டுகளாக தாயின் இறந்த உடலை பிரீசரில் மறைத்து வைத்து பெண் ஒருவர் பாதுகாத்து வந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் வசித்து வருபவர் யுமி யோஷினோ (வயது 48).  இவர் நகராட்சியின் வீட்டு வளாகத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கியுள்ளார்.  குடியிருப்புக்கான இந்த மாத வாடகையை அவர் தரவில்லை என கூறி வீட்டில் இருந்து யோஷினோ வெளியேற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவரது குடியிருப்பு பகுதி தூய்மைப்படுத்தப்பட்டது.  அந்த பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர், அறை ஒன்றில் பிரீசரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த பெண் உடலை கண்டு அதிர்ந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் நடத்திய விசாரணையில், யோஷினோவின் தாயார் உடல் அது என தெரிய வந்தது.  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்து விட்டார்.  ஆனால், இந்த விவரம் பற்றி யாரிடமும் யோஷினோ தெரிவிக்கவில்லை.

ஏனெனில் அவர் இறந்த விவரம் வெளியானால், அவருடன் பகிர்ந்து கொண்ட அந்த குடியிருப்பில் இருந்து தன்னை காலி செய்ய கூறிவிடுவார்கள் என யோஷினோ அச்சமடைந்து உள்ளார்.  யோஷினோவின் தாயார் பெயரிலேயே அந்த குடியிருப்பு குத்தகைக்கு எடுக்கப்பட்டு உள்ளது.  அவரது தாயார் இறந்தபொழுது 60 வயது இருக்கும் என கூறப்படுகிறது.

எனினும், பிரேத பரிசோதனை நடத்தினாலும், எந்த நேரத்தில் மற்றும் எந்த காரணத்திற்காக அவர் உயிரிழந்துள்ளார் என்ற விவரம் எதுவும் கண்டறிய முடியாது என்றும் கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!