நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதை தடுக்க தடுப்பூசி போட வேண்டும் - மருத்துவ நிபுணர்கள்.

கொரோனா வைரஸ் அடுத்தடுத்த உருமாற்றத்தின் போது கடும் விளைவுகளை உருவாக்கும் தன்மையை பெறும் என்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்வதே தொற்று பரவலை தடுக்க உரிய வழிமுறை என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
அமெரிக்காவின் பேர்ன் பல்கலை கழக தொற்றுநோய் இயல் பிரிவு பேராசிரியர் எம்மா ஹோட்கிராப்ட், ஒரு சில மணி நேரங்களிலேயே பெருகும் தன்மை கொண்ட வைரஸ்கள், ஒவ்வொரு முறையும் தன்னை ஒத்த, மற்றொரு வைரசை உருவாக்குவதில்லை என்று கூறியுள்ளார்.
சில நேரங்களில் வைரஸ்கள் பெருகும் போது,அதில் உருமாற்றம் நிகழும் என்றும், இந்த உருமாற்றம் அவற்றின் வீரியத்தை அதிகரிக்க செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் நோய் தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடுவதே ஒரே தீர்வு என்றும், தடுப்பூசி போடுவதால், தொற்று பரவல் தடுக்கப்பட்டு, வைரஸ்கள் பெருகுவதும், அவற்றின் உருமாற்றம் அடைவதும் தடுக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!