நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பறக்கும் கார்களைக் கொண்ட விமானநிலையம் அமைக்க இங்கிலாந்து முடிவு..!

பறக்கும் கார்களைக் கொண்ட சிறிய விமான நிலையத்தைக் கட்டமைக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.
கோவன்ட்ரி நகரில் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ள விமான நிலையத்திற்கான செயல்திட்டம் நடப்பாண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் கார்களுக்கான விமான நிலையம், செங்குத்தாக கார் விமானங்களை ஏற்றி இறக்கும் வசதி போன்றவை எதிர்காலத்தில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இதற்காக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பவுண்டுகளை இங்கிலாந்து ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் செயல்முறை கிராபிக்ஸ் காட்சிகளாக வெளியிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!