நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிரதமர் மோடி வரும் பிப்.14 ஆம் தேதி தமிழகம் வருகை

பிரதமர் மோடி வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தமிழகம் வருகை.

சென்னை

பிரதமர் மோடி வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார். மெட்ரோ ரெயில் விரிவாக்கம், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு  பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். சமீபத்தில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். 

 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருப்பதால், பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலை  அதிமுக - பாஜக இணைந்து சந்திக்கும் என  பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நேற்று அறிவித்து இருந்தது நினைவு கூரத்தக்கது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!