நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 39 வயதான நபர், 12 வயது சிறுமியிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதில், பாலியல் ரீதியான நோக்கத்துடன், உடலோடு, உடல் தொட்டால் மட்டுமே அது பாலியல் வன்கொடுமை. ஆடை அணிந்தபோது தொட்டால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது என்று தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்துள்ளது கவலைக்குரியது.இத்தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று வாதிடப்பட்டது.

வாதங்களை கேட்ட பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!