நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உருக வைக்கும் சோகத்தை பாருங்க.. இந்தியாவில் இறந்த கணவர்.. உடல் தகனத்தை ஆன்லைன் மூலம் பார்த்த மனைவி!

இந்தூர்: 
இந்தியாவில் கணவர் கொரோனாவால் இறந்ததால், அவரது உடலை தகனம் செய்யும் காட்சிகளை மனைவி சீனாவில் இருந்து ஆன்லைன் மூலம் பார்த்தார்.

பார்ப்பவர்கள் இதயம் நொறுங்கச் செய்யும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனை பார்த்த பலரும் ''எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது'' என்று தெரிவித்தனர்.

சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் உலக மக்களின் நிம்மதியை இழக்கச் செய்து வருகிறது.
ஈவு இரக்கமில்லாத கொரோனா

ஈவு இரக்கமில்லாமல் மனிதர்களின் உயிர்களை பறிக்கும் கொரோனா, மனிதர்களின் உணர்வுகளுடனும் தொடர்ந்து விளையாடி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் தற்போது நடந்து பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
சீனா வங்கியில் வேலை

சீனாவில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியான மனோஜ் சர்மா. 40 வயதான இவர் சீனாவில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்தார். மனோஜ் சர்மா, உடல்நிலை சரியில்லாத உறவினரை கவனித்துக்கொள்வதற்காக மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு வந்தார். மனைவி சீனாவில் தங்கி இருக்க மனோஜ் சர்மா மட்டும் தொடர்ந்து இந்தூரில் இருந்து வந்தார்.
உயிரை பறித்த கொரோனா

இதற்கிடையே மனோஜ் சர்மா கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இந்தூரின் ஸ்ரீ அரவிந்தோ மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்த மனோஜ் சர்மா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சீனாவில் அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொரோனா நிலை காரணமாக அவர் உடனடியாக இந்தியாவுக்கு வர முடியவில்லை. இதனால் மனோஜ் சர்மா உடலை இந்தியாவில் தகனம் செய்ய அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சீனாவில் இருந்து ஆன்லைன் மூலம் இந்தூர் போலீசாருக்கு அனுமதி கடிதம் அனுப்பினார்.
தகனம் செய்வதை பார்த்தார்

மேலும், உயிருக்கு உயிரான கணவரின் உடலை நேரில் பார்க்கும் பாக்கியம்தான் கிடைக்கவில்லை. எனவே கணவரின் உடலை தகனம் செய்வதை ஆன்லைன் மூலம் நேரடியாக பார்க்க மனோஜ் சர்மாவின் மனைவி முடிவு செய்தார். உள்ளூர் சமூக சேவகர் யஷ் பராஷர் என்பவர் மனோஜ் சர்மாவின் உடலை தகனம் செய்தார். இதனை ஆன்லைன் வீடியோ கால் மூலம் பார்த்த மனோஜ் சர்மாவின் மனைவி கண்ணீர் விட்டார். பார்ப்பவர்கள் இதயம் நொறுங்கச் செய்யும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனை பார்த்த பலரும் எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று தெரிவித்தனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!