Posts

Showing posts from June, 2021

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பசிக்கு சாப்பிடணும்… இது நமக்கு மட்டுமல்ல, பாம்புகளுக்கும் பொருந்தும்

Image
பாம்புகள் ஆபத்து என்று உணரும் போதும் இவ்வாறு சாப்பிட்ட உணவை வெளியேற்றும் ஒவ்வொரு நாளும் வன உயிரினங்களின் செயல்பாடுகள், சேட்டைகள், ரசிக்க வைக்கும் நிகழ்வுகளை நாம் வைரல் பிரிவில் பார்த்து, ரசித்து வருகின்றோம். சமயத்தில் பாம்பு புகைப்படங்கள், வீடியோக்கள் கூட மக்களிடம் நல்ல வரவேற்பையும், நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களையும் கற்று தருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பாம்பு ஒன்று தான் விழுங்கிய முட்டைகளை மீண்டும் வாய்வழியே வெளியேற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளது. உங்களின் ஜீரண சக்திக்கு அதிகமானதை உட்கொள்ளாதீர்கள் என்று அவர் கேப்ஷன் ஒன்றை எழுதி இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். மேலும் பிடிக்கப்பட்ட இந்த பாம்பு பத்திரமாக வனத்திற்குள் விடப்பட்டது எந்த தகவல்களையும் வெளியிட்டுள்ளார். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்ந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். பலர் தங்களின் கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். அதில், பாம்புகள் ஆபத்து என்று உணரும் போதும் இவ்வாறு சாப்பிட்ட உணவை வெளியேற்றும் என்றும்,

90 நிமிடங்களில் கொரோனா வைரசை கண்டறிந்து எச்சரிக்கும் நவீன முககவசம் கண்டு பிடிப்பு

Image
90 நிமிடங்களில் கொரோனா வைரசை கண்டறியக்கூடிய புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய முககவசத்தை எம்ஐடி, ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். வாஷிங்டன்  கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முககவசம் அணிகிறோம்.மூலிகை முக கவசம் துணியால் ஆன முககவசங்கள், பிளாஸ்டிக் முககவசம் என பல வகை முககவசங்கள் தற்போது விற்பனையாகின்றன. ஏன் தங்கத்தில் கூட ஒருவர் முக கவசம் அணிந்து வலம் வருகிறார். முககவசங்கள் உடன் வைபை, புளூடூத், ஸ்மார்ட்போன் ஆகியவற்றை இணைக்கும்படியான தொழில்நுட்ப ரீதியான முககவசங்கள் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் விற்பனையாகி வருகின்றன. தற்போது விஞ்ஞானிகள் ஓர் வித்தியாசமான தொழில்நுட்பம் நிறைந்த அதிநவீன முககவசம் ஒன்றை தயாரித்துள்ளனர்.   முககவசம் அணிந்தவரி 90 நிமிடங்களுக்குள் கொரோனா வைரசை கண்டறியக்கூடிய ஒரு புதிய முககவசத்தை மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இது குறித்து நேச்சர் பயோடெக்னாலஜி பிரபல அறிவியல் இதழ் கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பிரெஞ்சு விஞ்ஞா

ஸ்கிப்பிங் மட்டும் செய்தாலே உடல் எடையை குறைக்க முடியுமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

Image
10 நிமிடங்களுக்கு ஸ்கிப்பிங் செய்வதும் எட்டு நிமிடங்களுக்கு ஒரு மைல் தூரம் ஓடுவது இரண்டுமே ஒரே அளவு கலோரிகளை எரிகின்றன. ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் சுமார் 1,600 கலோரிகள் வரை எரிக்க முடியும். கொரியா நசரேன் பல்கலைக்கழகத்தின் கொரியா குடியரசு (தென் கொரியா) இயற்பியல் சிகிச்சை டிபார்ட்மென்ட்டால் ஒரு சுவாரஸ்யமான ஆய்வு 2017 இல் மேற்கொள்ளப்பட்டது. அதாவது " 20 வயதிற்குட்பட்ட அதிக எடை கொண்ட பெரியவர்களில் மியூசிக் ஜம்ப் கயிறு உடற்பயிற்சியின் பின்னர் நுரையீரல் செயல்பாடு மற்றும் உடல் நிறை குறியீட்டில் நடன இசை ஜம்ப் கயிறு பயிற்சியின் விளைவுகள் " என்ற தலைப்பில் இந்த ஆய்வு வெளியானது. இந்த ஆய்வின் நோக்கம், 20 வயதிற்குட்பட்ட அதிக உடல் எடை கொண்ட பெண்களில் நுரையீரல் செயல்பாடு மற்றும் உடல் நிறை குறியீட்டெண் மாற்றங்கள் குறித்த நடன இசை ஜம்ப் கயிறு பயிற்சியின் விளைவை ஆராய்வதாகும். மியூசிக் ஜம்ப் கயிறு (Music jump rope), இது ஒரு சிறப்பு வகை ஸ்கிப்பிங் கயிறு ஆகும். இது பின்னணி இசையுடன் செய்யப்படும் ஒரு குழு உடற்பயிற்சி. பங்கேற்பாளர்கள் இசையின் துடிப்பு மற்றும் டெம்போவுடன் பொருந்

சர்க்கரை_நோயாளிகள்_ஏன் 3_மாதத்திற்கு_ஒருமுறை……கட்டாயம்_HbA1c_பரிசோதனை செய்யணும்_தெரியுமா❓

Image
🇨🇭#சர்க்கரை_நோயாளிகள்_ஏன்  #3_மாதத்திற்கு_ஒருமுறை…… 🇨🇭#கட்டாயம்_HbA1c_பரிசோதனை #செய்யணும்_தெரியுமா❓ 🔯 தெருவுக்கு ஒரு…… சர்க்கரை நோயாளிகள் போக… இப்ப வீட்டு ஒரு சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு நீரிழிவு குறித்த நமது அறிவை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  🔯 நீரிழிவு நோய் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றையெல்லாம், நீங்கள் புறக்கணிக்க வேண்டியது அவசியம். 👉 நீரிழிவு நோயாளிகளுக்கு HbA1C பரிசோதனையை மேற்கொள்வது மிக முக்கியமானது. இது இரத்த சர்க்கரை அளவுகள் வரம்பில் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது. தேவைப்பட்டால் அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை சரிசெய்ய ஒரு மருத்துவருக்கும் இச்சோதனை உதவுகிறது. இந்த சோதனை ஆரோக்கியமான நபருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறியவும் உதவிடும்.  🔯 HbA1C சோதனை மற்றும் அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம். . . ⭕ ஹெச்.பி.ஏ.1.சி. (HbA1C) என்றால் என்ன❓ சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை 2 அல்லது 3 மாத காலத்திற்கு ஒரு முறை கண்காணிக்க HbA1C சோதனை நடத்தப்படுகிறத

மெக்சிகோவில் கஞ்சாவை பயிரிடுவதும், பயன்படுத்துவதும் இனி குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட்டு

Image
மெக்சிகோவில் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சாவை பயன்படுத்துவதற்கு கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியது. அதேசமயம் ஒரு நபர் 5 கிராமுக்கு அதிகமாக கஞ்சா வைத்திருப்பதற்கு அனுமதி கிடையாது. அதேபோல் போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதும், அதை பயிரிடுவதும் சட்டப்படி குற்றமாகும். இந்த சூழலில் கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கும் மசோதா ஒன்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேறியது. ஆனால் மேலவையில் அந்த மசோதாவை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு இளைஞர்கள் போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதும், சொந்த தேவைக்காக குறிப்பிட்ட அளவு கஞ்சாவை பயிரிடுவதும் குற்றம் அல்ல எனக்கூறி பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. கஞ்சா மீதான தற்போதைய தடை அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறி இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் இன்று சுதந்திரத்துக்கான வரலாற்று நாள் என்று தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி மெக்சிகோவில் இனி ஒவ்வொரு நபரும் 28 கிராம் கஞ்சாவை கையிருப்பு வைத்துக்கொள்ளலாம், அதேபோல் தங

டிசம்பரில் ககன்யான் விண்வெளி பயணம்

Image
பலவித தடைகளை கடந்து, ஆளில்லா 'ககன்யான்' விண்கலம் இந்தாண்டு டிசம்பரில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ககன்யான் திட்டத்தின் கீழ் மனிதர்களை விண்வெளி ஆய்வுக்கு அனுப்ப, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சுதந்திர தின விழா இது குறித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த 2018 சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசியபோது, 75வது சுதந்திர தின விழாவுக்கு முன், இந்தியா மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என்றார்.இதையடுத்து, ககன்யான் இஸ்ரோ திட்டத்தை வடிவமைத்தது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, விண்கலத்திற்கான பாகங்களை தயாரிக்கும் பணி ஒப்படைக்கப் பட்டது. அதன் அடிப்படையில், 2021 டிச., மற்றும் 2022 ஏப்ரலில் இரு ஆளில்லா விண்கலங்களை அனுப்ப திட்டமிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மனிதர்களை அனுப்ப முடிவு செய்து, நான்கு வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், விண்கலம் தயாரிப்பு பணி முடங்கியது. இதை தொடர்ந்து, இரண்டாவது அலையால் பிற

சீன நதியின் குறுக்கே உலகின் 2வது பெரிய நீர் மின்சார இயந்திரம்..!

Image
யுனான்:  நீர் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் உலகின் இரண்டாவது பெரிய இயந்திரத்தை சீனா முன்னதாக உருவாக்கி இருந்தது . தற்போது இந்த நீர் மின்சார இயந்திரம் பயன்படுத்த சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது. அனல்மின் நிலையம் மற்றும் அணுமின் நிலையம் ஆகியவற்றால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் நிலையில் காற்றாலை, நீர், சூரிய ஒளி ஆகிய இயற்கைக்கு மாசு ஏற்படுத்தாத, மீண்டும் பெறத்தக்க முறைகள் மூலமாக மின்சாரம் தயாரிக்க உலகம் முழுவதும் விஞ்ஞானிகளால் வலியுறுத்தப்படுகிறது. இந்த நீர் மின்சார இயந்திரம் 289 மீட்டர் (948 அடி) உயரம் கொண்டது. தென்மேற்கு சீன பகுதியில் உருவாகியிருக்கும் இந்த நீர் மின்சார இயந்திரம் ஐந்து லட்சம் கோடி மக்களின் மின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் என கூறியுள்ளது சீன அரசு தரப்பு. அரசு தீவிர முயற்சி உலகின் அதிக மக்கள் தொகைகொண்ட சீன நாட்டில் நாளுக்குநாள் தொழிற்சாலைகள் மற்றும் குடிமக்களின் தேவைக்காக அதிக அளவு மின்சாரம் தேவைப்படும் நிலையில் கடந்த ஓராண்டாக நீர் மூலமாக மின்சாரம் தயாரிக்க சீன கம்யூனிச அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ப

வாசிப்பை நேசிப்போம்

Image
இவ்வுலகில் புத்தகங்களும், புனித நூல்களும் தான் ஒருவனை மனிதனாக உருவாக்குகின்றன. புத்தகங்களை வாசிப்பதன் மூலமே ஒருவன் அறிவாளியாக மாறுகிறான். இவ்வுலகில் புத்தகங்களும், புனித நூல்களும் தான் ஒருவனை மனிதனாக உருவாக்குகின்றன. புத்தகங்களை வாசிப்பதன் மூலமே ஒருவன் அறிவாளியாக மாறுகிறான். இன்றைய இளைய சமுதாயம் செல்போன் பயன்படுத்துவதிலும், சினிமா பார்ப்பதிலும் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். அந்த நேரத்தில் புத்தகங்களை நேசித்து வாசித்தால் நன்மை பயக்கும். வேலைக்கு செல்கின்ற இடத்தில் அதிக பயன் தரும். அண்ணா, பெரியார், அம்பேத்கர், அப்துல் கலாம் போன்ற மாபெரும் மனிதர்கள் தங்கள் வாழ்நாளின் இறுதி வரை புத்தகங்களை வாசித்து கொண்டே இருந்தனர். நாம், ஒவ்வொரு புத்தகத்தை வாசிக்கும்போதும் ஓர் புதிய அனுபவத்தை உணரலாம். அனுபவத்தின் முதல் ஆசான் புத்தகமே. நாம் ஒரு புத்தகத்தை தேடும்போது, நமது தேடலானது ‘ஈ’ யை போன்று இருக்கக் கூடாது. ‘தேனீ’யை போன்று இருக்க வேண்டும். ஏனென்றால் ‘ஈ’ யானது நமக்கு தீமையை ஏற்படுத்துவதாகும். ‘தேனீ’ நமக்கு நன்மை விளைவிக்க கூடியதாகும். ஆகவே, நல்ல புத்தகங்களை கண்டறிந்து வாசிக்க வேண்டும்

அன்றாட வாழ்வில் அறிவியல்

Image
அறிவியல் என்பது ஒவ்வொரு செயல்களிலும் ஆழமாக பொதிந்திருக்கின்ற அர்த்தப்பாடுகளை விஞ்ஞான ரீதியாக பார்ப்பதாகும். அறிவியல் என்பது ஒவ்வொரு செயல்களிலும் ஆழமாக பொதிந்திருக்கின்ற அர்த்தப்பாடுகளை விஞ்ஞான ரீதியாக பார்ப்பதாகும். அறிவியல் இன்றைக்கு பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது. மனிதனுடைய ஒவ்வொரு செயற்பாடுகளிலும் ஆழமான அறிவியல் பொதிந்திருக்கிறது. மனிதன் அன்றாடம் ஏராளமான செயற்பாடு களை ஆற்றுகிறான். வாழ்நாள் முழுவதும் மனிதன் இயங்கி கொண்டிருக்கிறான். நமது அன்றாட வாழ்வில் பல அறிவியல் உண்மைகள் காணப்படுகின்றன. மனிதன் அன்றாடம் ஆற்றும் தொழில்கள் என்ன? அவை ஏன் இடம்பெறுகின்றன? இவை ஏன் தவிர்க்க முடியாத செயற்பாடுகள் என விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. மனிதன் சுவாசிக்கின்றான் என்றால் மனிதன் சுவாசிப்பதன் மூலமே உடல் இயக்கம் பெறுகிறது. ரத்த சுற்றோட்டம் இடம் பெறுகிறது. உடலின் எல்லா பாகங்களிற்கும் ரத்தம் கொண்டு செல்லப்படுகிறது. மனித உடலே ஒரு அறிவியல் அதிசயம். மனிதனுக்கு பசிக்கிறது உணவை எடுத்து கொண்டால் தான் சக்தி கிடைக்கிறது. இதனால் தான் உடல் உறுப்புக்கள்இயங்குகிறது. உடலின் நீர் மூலமே கலங்கள் இயங்கி கொண்டிருக்க

தமிழ்மொழியின் சிறப்பு

Image
பழமையான மொழி, பண்பட்ட மொழி, நம் பைந்தமிழ் மொழி, தேனினும் இனியது நம் தீந்தமிழ் மொழி தமிழ் என்றால் எளிமை. பழமையான மொழி, பண்பட்ட மொழி, நம் பைந்தமிழ் மொழி, தேனினும் இனியது நம் தீந்தமிழ் மொழி தமிழ் என்றால் எளிமை. தமிழ் என்றால் அழகு. தமிழ் என்றால் அமிழ்தம். இனிமையான, எளிமையான மொழியாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற தமிழ்மொழியை பற்றி இந்த கட்டுரையில் காண்போம் எத்தனையோ மொழிகள் உலகில் தோன்றியுள்ளன. கால வெள்ளத்தை கடக்க முடியாமல் எத்தனையோ மொழிகள் அழிந்துவிட்டன. உலகிலேயே பழமையான மொழிகள் எனப் பாராட்டப்படுபவை லத்தீன், கிரேக்கம், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய 6 மொழிகள் தாம். அவற்றில் லத்தீன், கிரேக்கம், எபிரேயம் இன்று இல்லை. அதேபோல் சமஸ்கிருதம் பேச்சுவழக்கில் குன்றிவிட்டது. எஞ்சியிருப்பவை இரண்டே. ஒன்று தமிழ். மற்றொன்று சீன மொழி. அதில் தமிழ்மொழி அழியாத மொழியாக, சிதையாத மொழியாக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இலக்கண அமைப்பில் புதுமை கண்ட பெருமை தமிழ்மொழிக்கே உண்டு. தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களாய் அமைத்து தம

உணவே மருந்து

Image
மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவாகும். மக்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கங்களுமே அவர்களின் உடல் நலத்தை தீர்மானிக்கின்றன. மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவாகும். மக்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கங்களுமே அவர்களின் உடல் நலத்தை தீர்மானிக்கின்றன. தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாய் கருதப்படுகிறது. இயற்கை உணவு இயற்கை உணவு முறையினையும், இயற்கையோடு இயைந்த பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் உடல் நலத்தையும் உள நலத்தையும் நாம் பாதுகாக்க முடியும். இன்று சமையல் முறைகள் நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுகின்றன. உணவகங்கள் நம்மிடையே அதிகமாய் பெருகி உள்ளன. சத்துக்காக இல்லாமல் சுவைக்காக உண்ணும் பழக்கம் நம்மிடையே அதிகமாய் இருக்கிறது. அட்டை பெட்டிகளிலும், தாள் பைகளிலும் பதப்படுத்தி அடைத்த ஆய்ந்த உணவு வகைகள், விரைவு உணவுகள் இன்று நம்மிடையே பழக்கத்திற்கு வந்துள்ளன. அதனால் நோய்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன. வருமுன் காப்பது உணவே மருந்து எண்ணும் நிலை மாறி, மருந்தே உணவு எண்ணும் நிலைக

உகான் ஆய்வகத்தில் நடந்தது என்ன? - ஆஸி. பெண் விஞ்ஞானி விளக்கம்

Image
சீனாவின் உகான் நகரில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிய ஒரே வெளிநாட்டு விஞ்ஞானியான டேனியெலெ ஆன்டெர்சென், அங்கு பணியாற்றிய அனுபவங்களை பற்றி முதன் முறையாக பேட்டியளித்துள்ளார். வாஷிங்டன், சீனாவின் உகான் நகரில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் இருந்து 2019இல் கொரோனா வைரஸ் முதன் முதலாக மனிதர்களுக்கு பரவியதாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கருதுகின்றன. இதைப் பற்றி ஆராய உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரியில் உகான் நகருக்கு அனுப்பிய நிபுணர்கள் குழுவினரால், இதற்கான ஆதாரங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.  இந்நிலையில், உகான் வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் 2019 நவம்பர் வரை பணியாற்றிய ஆஸ்த்ரேலியாவைச் சேர்ந்த வைரஸ் ஆய்வு நிபுணரான டேனியெலெ ஆன்டெர்சென், புளூம்பெர்க் என்ற புகழ்பெற்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.  அப்போது அவர் கூறியதாவது:- உகான் வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் செயல்பாடுகளில் அசாதரணமாக எதுவும் தென்படவில்லை என்றும், அங்கு பணியாற்றியவர்கள் யாருக்கும் 2019 இறுதி வரை உடல் நலக் குறைவு ஏற்படவில்லை என்றும் டேனியெலெ ஆன்டெர்சென் கூறியுள்ளார். உகான் வை

வெறும் வயிற்றில் காபியுடன் இந்த 3 பொருட்களை சேர்த்து குடித்தால் உடல் எடை குறையுமாம்!

Image
நாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவலாம் என்று 10 ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. காலையில் எழுந்ததும் காபி குடிக்க நிறைய பேருக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி காபி குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இப்படி காபி குடித்தால் உடல் எடை குறையுமாம். அதுவும் அந்த காபியுடன் ஒரு 3 பொருட்களைக் கலந்து குடித்தால், ஒரே மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியுமாம். ஆச்சரியமாக இருக்கிறதா... காபியுடன் எந்த பொருட்களை சேர்த்து குடித்தால் உடல் எடை குறையும் என்பதைப் பற்றி பார்ப்போம் - பட்டை பட்டையில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளது. இது உடலினுள் உள்ள நோய்த்தொற்றுகள் மற்றும் அழற்சிகளை எதிர்த்துப் போராடும். மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, சர்க்கரையை உடைத்து ஆற்றலாக மாற்றும். தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது இயற்கையாக உடலில் உள்

விரல்களுக்கு அழகு தரும் விதவிதமான மோதிரங்கள்

Image
அன்றாட வாழ்வில் ஆண்களும் பெண்களும் அணிந்து மகிழும் மோதிரங்களுக்கும் பெயர்கள் உள்ளன. அவை பற்றி குறிப்பிடுவதே இந்த தொகுப்பு... அன்றாட வாழ்வில் ஆண்களும் பெண்களும் அணிந்து மகிழும் ஆபரணங்கள் அனைத்துக்கும் பொருத்தமான பெயர்கள் உள்ளன. அதன் பின்னால் அதற்கான வரலாறும் இருக்கும். அந்த வகையில் அனைவரும் அணியும் மோதிரங்களுக்கும் பெயர்கள் உள்ளன. அவை பற்றி குறிப்பிடுவதே இந்த தொகுப்பு ஆர்மர் மோதிரம் போர் கவசம் போன்ற தோற்றம் அளிப்பதால் அதற்கு ஆர்மர் மோதிரம் என்று பெயர். இவ்வகை மோதிரங்களை நடுவிரலில் அணிவது வழக்கம். பிசினஸ் மீட்டிங்கில் கலந்து கொள்ளும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைனோர் இவ்வகை மோதிரங்களை அணிந்து சென்றால் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். தம்ப் ரிங்க ( கட்டை விரல் மோதிரம்) கட்டை விரலில் மட்டும் அணிவதற்கேற்ப தடிமனாக இவ்வகை மோதிரம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு விருந்துகள், விழாக்கள் மற்றும் பார்ட்டி ஆகியவற்றுக்கு அணிந்து செல்ல இந்த மோதிரம் ஏற்றதாக சொல்லப்படுகிறது. காக்டெய்ல் மோதிரம் அனைவருக்கும் பரிச்சயமான இவ்வகை மோதிரத்தின் பெயர் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டோம். நடுவில் ப

பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கும் வேப்ப இலை

Image
தினமும் வேப்ப இலை சாறு குடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. நீரிழிவு போன்ற நோய்கள் நெருங்காது. ஆனாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்றே இதை பருக வேண்டும். ஆயுர்வேதத்தில் வேம்பு, ஒரு அதிசய மரமாக கருதப்படுகிறது. வேப்ப மரத்தின் வேர், பழம், இலை, பட்டை என ஒவ்வொரு பகுதியும் மருந்துக்கு பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. வேப்ப இலை சாற்றை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம். வேப்ப இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு ரத்தத்தை சுத்திகரிக்க உதவும். கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவும். பொடுகு, முடி உதிர்தல் பிரச்சினையை போக்குவதற்கு வேப்ப இலை சாறை தலையில் தடவலாம். பருகவும் செய்யலாம். வேப்ப இலை சாறு மலேரியாவுக்கு காரணமான வைரஸை வளரவிடாமல் செய்துவிடும். வேப்ப இலை சாறுடன் தேன் கலந்து பருகினால் மஞ்சள் காமாலை பாதிப்பில் இருந்தும் விடுபடலாம். வேம்பு ரத்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். கல்லீரலுக்கும் வலிமை சேர்க்கும். வேப்ப இலை சாறு செரிமானம் சீராக நடைபெற துணைபுரியும். நோய் எதிர்ப்பு ச

புற்றுநோய் வருவதை தடுக்கும் உடற்பயிற்சி

Image
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தாலும் கூட நடைப்பயிற்சி போன்ற இலகுவான உடற்பயிற்சிகளை செய்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது. ஊடரங்கு காலத்தில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ஐ.டி.துறையில் ஷிப்டு முறையில் பணிபுரிந் தவர்கள் மடிக்கணினி முன்பு மணிக்கணக்கில் அமர்ந்து வேலை செய்கிறார்கள். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல் பருமன், கழுத்து மற்றும் முதுகுவலி பிரச்சினைக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி புற்றுநோய் பாதிப்புக்கும் ஆளாக நேரிடும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஜமா ஆன்காலஜி’ என்ற மருத்துவ இதழ் சமீபத்தில் நீண்ட நேரம் உட்காருவதற்கும், புற்றுநோய்க்கும் இடையே உள்ள தொடர்பை மையப்படுத்தி ஆய்வு முடிவை வெளியிட்டது. போதுமான நேரம் இடைவெளி எடுத்துக்கொள்ளாமல் அதிக நேரம் உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து இருப்பதை ஆய்வுக்குழுவினர் உறுதி செய்திருக்கிறார்கள். இந்த அபாயத்தை தவிர்ப்பதற்கு வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று

பங்களா இருக்கணும்.. சமைக்க தெரியணும்..அப்புறம் 20 ஏக்கர்ல ஃபார்ம் ஹவுஸ் வச்சிருக்கனும் - வைரலாகும் மணமகன் தேவை விளம்பரம்!

Image
  பங்களாவுடன் மணமகன் கேட்டு செய்தித்தாளில் வெளியான விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சொந்தம், பந்தம் எனப் பெரிய பட்டாளத்துடன் பெண் பார்க்கச் சென்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. தற்போது இணையதளங்கள், செய்திதாள்களில் வரன்களை தேடிப் பிடிப்பதுதான் ட்ரெண்டாக உள்ளது. கிராமம், நகரம் என பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் இதன் மூலம் வரன் பார்ப்பதை அதிகமாக விரும்புகின்றனர். இதன் விளைவாக, மேட்ரிமோனி தளங்களின் எண்ணிக்கை, செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுப்பதும் கணிசமாக அதிகரித்துவிட்டன. அதில் தங்களுக்கு தேவையான வரன், விருப்பத்திற்கு ஏற்றவாறு வரன்களை தேர்வு செய்யலாம் என்பதால் ஏராளமானோர் இதனை விரும்புகின்றனர். இதில் மணமகன் மற்றும் மணமகள் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான வரன்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிட்டிருப்பார்கள். அப்படி சிலர் குறிப்பிடும் விஷயங்கள் மிகவும் வேடிக்கையாகவும் சில நேரங்களில் அதிர்ச்சியாகவும் இருக்கும். அந்த வகையில் ஒரு மணமகன் தேவை என ஆங்கில நாளிதழ் ஒன்றில் குறிப்பிட்டிருந்த விளம்பரமானது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த விளம்பரத்தில் "பெண்ணியவ

கொரோனா 3-ம் அலை: குழந்தைகளை பாதுகாக்கும் வழிகாட்டுதல்கள்

Image
கொரோனா 3-வது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். கொரோனா 3-வது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று பலர் பரிந்துரைத்தாலும், இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் (ஐ.ஏ.பி) எனப்படும் குழந்தைகளுக்கான மருத்துவ சங்கம் இதனை மறுத்துள்ளது. ‘பெரியவர்கள் மற்றும் வயதான நபர்களைப் போலவே குழந்தைகளுக்கும் இந்த வைரஸ் தொற்றுநோயை உருவாக்கக்கூடியது. ஆனால் கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும் மூன்றாவது அலை குழந்தைகளை பிரத்யேகமாக பாதிக்கும் என்பது சாத்தியமில்லாதது’ என்றும் கூறி உள்ளது. இருப்பினும் சமீபத்திய மாதங்களில் உருமாறிக்கொண்டிருக்கும் வைரஸின் போக்கை கணிப்பது மருத்துவ நிபுணர்களுக்கு சவாலானதாக இருக்கிறது.அதனால் வைரசிடம் இருந்து குழந்தைகளை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதுதான் நல்லது. ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய

காதலுக்கு கண் இல்லை' கின்னஸ் சாதனை படைத்த பிரித்தானிய ஜோடி!

Image
உடல் உயரத்தில் அதிக வித்தியாசம் உடைய பிரித்தானிய ஜோடி, உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. பிரித்தானியாவில் லண்டனைச் சேர்ந்தவர் ஜேம்ஸ், 33. இவர் தோகைக்காட்சி நடிகர் மற்றும் தொகுப்பாளர் ஆவார். இவரது மனைவி ஷோலி, 27 (Chloe Lusted) ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர்கள் 2013-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதில் சிறப்பு என்னவென்றால், ஜேம்ஸ்சின் உயரம் 109.3 செ.மீ (3 அடி 7 அங்குலம்), ஷோலியின் உயரம் 166.1 செ.மீ., (5 அடி 5.4 அங்குலம்). இருவருக்குமான உயர வித்தியாசம், 56.8 செ.மீ., (1 அடி, 10 அங்குலம்) கிட்டத்தட்ட 2 அடி ஆகும். இந்த உயர வித்தியாசமே, இவர்கள் ஜூன் 2-ஆம் திகதி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததற்கான காரணமாக அமைந்தது. ஆம், இந்த சிறப்பு தம்பதிக்கு 'ஆண் உயரம் குறைவு; பெண் உயரம் அதிகம்' என்ற பிரிவில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. Diastrophic Dysplasia என்ற மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டவர் ஜேம்ஸ். இதனால், இவரது எலும்பு மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டில், ஜேம்ஸ் தனது சொந்த ஊர் வழியாக ஒலிம்பிக் ஜோதியை எடுத்துச் சென்ற சிறிது நேரத

உலகின் நம்பர்-1 பணக்காரர் Jeff Bezos-ன் 165 மில்லியன் அரண்மனை மாளிகை! அப்படி என்ன உள்ளது? புகைப்படங்கள் உள்ளே

Image
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் 165 மில்லியன் அரண்மனை மாளிகை குறித்த சுவாரசியமான தகவல்களை புகைப்படங்களுடன் பார்க்கலாம். அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியும், உலகின் நம்பர்-1 பணக்காரருமான ஜெஃப் பெசோஸ் கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் உள்ள ஒரு பரந்த மாளிகை உட்பட உலகம் முழுவதும் பல சொத்துக்களை வைத்திருக்கிறார். ஜெஃப் பெசோஸ் இந்த வீட்டை பில்லியனர் டேவிட் கெஃபெனிடமிருந்து 165 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கினார். தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கூற்றுப்படி, இந்த வீட்டை அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி பெசோஸ் 165 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார், இதனால் கலிபோர்னியா மாநில வரலாற்றில் மண்திறக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த வீடு என்ற புதிய சாதனை படைக்கப்பட்டது. முழு தோட்டமும் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது பெவர்லி ஹில்ஸின் அருகில் Benedict Canyon பகுதியில் அமைந்துள்ளது. 1937-ல் ஜார்ஜிய பாணியில் (Georgian-style) கட்டப்பட்டுள்ள இந்த ஆடம்பரமான மாளிகையில் 8 படுக்கையறைகள் மற்றும் 9 குளியலறைகள் உள்ளன. இந்த மாளிகையில் ஒரு காலத்தில் ந

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் ஒற்றை பரிசோதனை! விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தகவல்

Image
ஒற்றை இரத்த பரிசோதனையில் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே 50 வகையான புற்றுநோயைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'கேலரி' (Galleri) என்ற எளிய இரத்த பரிசோதனையின் மூலம் 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புற்றுநோய்களைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதுவும், எந்தவொரு மருத்துவ அறிகுறிகளையும் காண்பிப்பதற்கு முன்பே, போதுமான அளவிற்கு துல்லியமாக கண்டறியமுடியும் என்றும், இதனை பல புற்றுநோய்களை கண்டறியும் பரிசோதனையாகப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆராய்ச்சியை உருவாக்கி நிதியளித்த அமெரிக்க நிறுவனமான GRAIL, Inc., சமீபத்தில் பல புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிதல் இந்த பரிசோதனையை அமெரிக்க மருந்து கடைகளில் கிடைக்கச் செய்துள்ளது. இது மார்பக, கர்ப்பப்பை வாய், புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய்களுக்கான பிற தற்போதைய ஸ்கிரீனிங் நடைமுறைகளுக்கு துணைபுரிகிறது. மொத்தம் 134,000-க்கும் மேற்பட்ட நபர்கள் GRAIL-ன் இரத்த பரிசோதனை மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்றுள்ளனர். இந்த பரிசோதனை புற்றுநோயின் இருப்பிடத்தையும் கண்டறிய

வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் உங்ககிட்ட கூட நெருங்காது!!!

Image
வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள். மேலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது இந்த வெந்தயத்தில். பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி வெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது. மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது. இதனை முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் பலன்கள் இன்னும் இரட்டிப்பாகும். தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம்? இதன் நன்மைகள் என்னெ்னன என்பதை பார்ப்போம்.   எப்படி எடுத்து கொள்ளலாம்?    4 ஸ்பூன் வெந்தையத்தை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். பிறகு 1 கப் தண்ணீர் எடுத்து ஊற வைத்து கொள்ளவும். இது இரவு முழுவதும் ஊற விட வேண்டும். 12 மணி நேரம் ஊறினால் போதும். தண்ணீரை வடிக்கட்டிய பிறகு 1 அல்லது 2 நாட்கள் அப்படியே முடி வைக்கவும்.    முளைக்கட்டிய பின் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் சாப்பிடுங்க. மதி

சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள சீனத் துறவி! அப்படி என்ன செய்கிறார்?

Image
சீனத் துறவி ஒருவர் சுமார் 8,000 தெரு நாய்களைக் காப்பாற்றி வளர்த்து வருகிறார். இவரது சேவை தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜி சியாங் (Zhi Xiang) சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த ஒரு பௌத்தத் துறவியாவார். 51 வயதான ஜி சியாங் தனது நம்பிக்கையின் ஒரு பகுதியாக 1994 முதல் ஷாங்காய் தெருக்களில் கைவிடப்பட்ட விலங்குகளை மீட்டு, தம்முடைய ஆலயத்திலோ விலங்குகள் காப்பகத்திலோ அவற்றுக்குப் புது வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறார். அவர் சுமார் 8,000 நாய்களைப் பராமரித்து வருகிறார். அதற்காக, ஆண்டுக்கு சுமார் 2 மில்லியன் டொலர் செலவிடுகிறார். நாய்களுக்காக மாதந்தோறும் 60 டன் உணவு வாங்குகிறார். மேலும், சில நூறு நாய்களை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு அவற்றை வளர்க்க விரும்பும் மனிதர்களுடன் அனுப்பி வைக்கிறார். கிட்டத்தட்ட 3 சதாப்தங்களாக தனது சேவையை செய்துவரும் ஜி சியாங், தாம் காப்பாற்றவில்லை என்றால், அந்த நாய்கள் நிச்சயம் இறந்துவிடும் என்கிறார். இந்த சேவையை தொடங்கியதிலிருந்து, நாய்களை மட்டுமல்ல, தெருக்களில் உலவித் திரியும் பூனை உள்ளிட்ட விலங்குகளையும் காப்பாற்றிப் பராமரிக்கிற

சூரியனை கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் படம்: நாசா வெளியீடு

Image
வாஷிங்டன்:  பூமிக்கும் மேலே உள்ள சர்வதேச விண்வெளி நிலையம் சூரியனுக்கு எதிரே கடக்கையில் கொசு போல காட்சியளிக்கும் படத்தை நாசா விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது. பூமியிலிருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் தாழ் வட்டப் பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியாக இந்நிலையம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையத்தின் படம் ஒன்றை சமீபத்தில் அமெரிக்காவின் விர்ஜினியாவிலிருந்து எடுத்துள்ளனர். பிரம்மாண்ட மஞ்சள் ஆரஞ்சு வண்ண சூரியனுக்கு நடுவே கொசு போல சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட படத்தை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்துள்ளனர். அப்படத்தை 7 பிரேம்களாக எடுத்து நாசா தொகுத்து வழங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் விநாடிக்கு சுமார் 8 கி.மீ வேகத்தில் பயணிப்பதாகவும் நாசா கூறியுள்ளது. இப்புகைப்படம் எடுக்கப்பட்ட சமயத்தில் விண்வெளி வீரர்கள் ஷேன் கிம்பரோ மற்றும் தாமஸ் பெஸ்குவெட் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளது. ஸ்பேஸ்வாக் மூலம் அவர்க

தொலைந்த செல்போனை சில நிமிடங்களில் கண்டுபிடித்து லாக் செய்வது எப்படி?

Image
செல்போன்களை பலரும் தெரியாமல் தவற விட்டுவிடுவோம். அப்படி தவறவிட்டால் பதறாமல் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலை வேண்டாம். அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும். தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும். அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.  find my device find my device மூலம் இதை எளிதான செய்ய முடியும். முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்.. பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை log in செய்ய வேண்டும்.உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும். அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound,lock ,erase என்ற 3 தகவல்கள் இருக்கும். ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map மூலமாக தெரியவரும். play sound கிளிக் செல்தால் செல்போன் 5 நிமி

வேற்று கிரக வாசிகள் உலகம் இருக்கிறதா? அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா

Image
ராணுவ விமானிகள் 'விண்ணில் பார்த்த விவரிக்க முடியாத பறக்கும் பொருட்களுக்கு' (unidentified flying objects) எந்த விளக்கமும் இல்லை என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் விண்ணில் விவரிக்க முடியாத நிகழ்வுகள் நடப்பதாக 144 முறை அறிக்கைகள் தரப்பட்டும், ஒரே ஒரு நிகழ்வை தவிற, இதுகுறித்து எந்த விளக்கமும் இல்லை என்று வெள்ளிக்கிழமை அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையகமான பெண்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. எனினும், பறக்கும் நிகழ்வுகள் வேற்றுகிரக வாசிகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறிவிட முடியாது. விண்ணில் அதி வேகமாக சில பொருட்கள் பறப்பதாக அமெரிக்க ராணுவம் பல முறை தெரிவித்ததையடுத்து இது குறித்த அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் (அமெரிக்க நாடாளுமன்றம்) வலியுறுத்தியது. பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம், விண்ணில் அடையாளம் தெரியாத நிகழ்வு நடப்பது குறித்த அறிக்கைகளை ஆராய, குழு ஒன்றை பெண்டகன் அமைத்தது. இந்த நிகழ்வுகளை "கண்டறிந்து, பகுப்பாய்வு செய்து மற்றும் பட்டியிலிடுவதே" இந்த குழுவின் வேலை. மேலும், விண்ணில் பறக்கும் பொருட்களின் "இயல்பு மற

உடலில் சுரக்கும் ‘பாச ஹார்மோன்’

Image
காதலிக்கும் பெண்ணை பார்க்கும்போது இளைஞனின் உடலில் ஒருவித பதற்றமும் தவிப்பும் ஏற்படும். இரவில் அவளையே நினைத்தால் தூக்கம் கெடும். உடலுக்குள் ஒருவித கிளர்ச்சி உருவாகும். எப்போதும் அவள் நினைவே வந்து  பசியை குறைக்கும். ‘தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. தனக்கு விடியலும், உற்சாகமும் அவள்தான். அவளை பார்த்தே ஆகவேண்டும்’ என்று புலம்ப வைக்கும். காதலித்த அனைவரும் இந்த தவிப்பை உணர்ந்திருப்பார்கள். இந்த தவிப்பு அனைத்துக்கும் காரணமாக இருப்பது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான். காதலியை பார்த்ததும் பரவசத்துடன் கூடிய பதற்றத்தை உருவாக்குபவை அட்ரினலின், கார்டிசால் ஆகிய ஹார்மோன்கள். இரவில் காதலியை நினைத்து தூக்கத்தை இழக்கவைப்பது டோபமைன் ஹார்மோன். செரோடோனின் சுரக்கும்போது உடலில் ஏக்கமும், தவிப்பும் தோன்றும். காதலியை பார்க்கும்போது ஈஸ்ட்ரோஜனும், டெஸ்டோஸ்டிரானும் சுரந்து இச்சையை உருவாக்கும். ஆக நீங்கள் காதலில் விழுந்துவிட்டால் இத்தனை ஹார்மோன்களும் அவ்வப்போது சுரந்து உடலுக்குள் ஏகப்பட்ட கலாட்டாக்கள் செய்யும். வெளிப்படையாக காதலிக்கு வழங்கும் முத்தம் காதலனின் உடலுக்குள் பல ரசாயன மாற்றங்களை நிகழ

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!