நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள சீனத் துறவி! அப்படி என்ன செய்கிறார்?

சீனத் துறவி ஒருவர் சுமார் 8,000 தெரு நாய்களைக் காப்பாற்றி வளர்த்து வருகிறார். இவரது சேவை தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜி சியாங் (Zhi Xiang) சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த ஒரு பௌத்தத் துறவியாவார்.

51 வயதான ஜி சியாங் தனது நம்பிக்கையின் ஒரு பகுதியாக 1994 முதல் ஷாங்காய் தெருக்களில் கைவிடப்பட்ட விலங்குகளை மீட்டு, தம்முடைய ஆலயத்திலோ விலங்குகள் காப்பகத்திலோ அவற்றுக்குப் புது வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறார்.
அவர் சுமார் 8,000 நாய்களைப் பராமரித்து வருகிறார். அதற்காக, ஆண்டுக்கு சுமார் 2 மில்லியன் டொலர் செலவிடுகிறார். நாய்களுக்காக மாதந்தோறும் 60 டன் உணவு வாங்குகிறார்.

மேலும், சில நூறு நாய்களை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு அவற்றை வளர்க்க விரும்பும் மனிதர்களுடன் அனுப்பி வைக்கிறார்.
கிட்டத்தட்ட 3 சதாப்தங்களாக தனது சேவையை செய்துவரும் ஜி சியாங், தாம் காப்பாற்றவில்லை என்றால், அந்த நாய்கள் நிச்சயம் இறந்துவிடும் என்கிறார்.

இந்த சேவையை தொடங்கியதிலிருந்து, நாய்களை மட்டுமல்ல, தெருக்களில் உலவித் திரியும் பூனை உள்ளிட்ட விலங்குகளையும் காப்பாற்றிப் பராமரிக்கிறார்.

சீனாவில் தெரு நாய்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்துள்ளது. அங்கு சுமார் 50 மில்லியன் விலங்குகள் தெருக்களில் சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகிக் கொண்டிருக்கிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!