நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து உண்ணக்கூடிய வெண்ணிலா எசன்ஸை உருவாக்கிய விஞ்ஞானிகள்!

உணவுத் தொழில்கள், அழகுசாதனப் பொருட்கள், களைக்கொல்லிகள், ஆன்டிஃபோமிங் முகவர்கள் மற்றும் துப்புரவுப் பொருட்கள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், 2018 ஆம் ஆண்டில் வெண்ணிலின் உலகளாவிய தேவை 37,000 டன்களுக்கும் அதிகமாக இருக்கின்றது.

பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு பயனுள்ள பொருளாக மாற்றுவதற்கான ஒரு புதிய வழியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது உண்மையில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க உதவுகிறது. எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த நுட்பத்தை பயன்படுத்தி மரபணு முறையில் வடிவமைக்கப்பட்ட ஈ-கோலி பாக்டீரியாவால் பிளாஸ்டிக்கை உண்ணக்கூடிய வெண்ணிலா எசன்ஸாக மாற்றியுள்ளனர்.

விஞ்ஞானிகள் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை வெண்ணிலா சுவையாக மாற்றுவதன் மூலம் அவர்கள் கண்டுபிடித்த நுட்பத்தை சரியானது என்று நிரூபித்துள்ளனர். இதில் ஈ.கோலியை சிதைந்த பிளாஸ்டிக் கழிவுகளில் பயன்படுத்துவதன் மூலம் இந்த செயல் நடைபெறுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உற்பத்தி செய்யப்படும் சுவையானது மனிதர்களால் நுகரப்படும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணிலா எசன்ஸ் மக்களால் உண்ணக்கூடிய உணவாக அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மேலும் பல சோதனைகள் தேவை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஏறக்குறைய 50 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளில், குறிப்பாக பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) என்ற பிளாஸ்டிக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. PET என்பது பேக்கேஜிங் மற்றும் நீர் பாட்டில்களில் பயன்படுத்தப்படும் இலகுரக மற்றும் வலுவான பிளாஸ்டிக் ஆகும். PET என்பது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவிலிருந்து பெறப்படுகிறது. அவை தங்களை புதுப்பிக்க முடியாத ஆற்றல் மூலங்களைக் கொண்டுள்ளது. PET மறுசுழற்சி செய்யும்போது பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து சேர்க்கும் தயாரிப்புகளை உருவாக்குகிறது.

மறுபுறம், வெண்ணிலா சுவை கொண்ட வெண்ணிலின் தேவை மிக அதிகமாக உள்ளது. உணவுத் தொழில்கள், அழகுசாதனப் பொருட்கள், களைக்கொல்லிகள், ஆன்டிஃபோமிங் முகவர்கள் மற்றும் துப்புரவுப் பொருட்கள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், 2018 ஆம் ஆண்டில் வெண்ணிலின் உலகளாவிய தேவை 37,000 டன்களுக்கும் அதிகமாக இருக்கின்றது.

பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதில் புதிதாக உருவாக்கப்பட்ட நுட்பம் ஒரு கேம் சேஞ்சாராக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு மதிப்புமிக்க தொழில்துறை இரசாயனமாக மாற்றியமைக்கும் ஆய்வு பல அற்புதமான தாக்கங்களைக் கொண்ட ஒன்று என்று அவர்கள் தங்களது நுட்பத்தைப் விளக்கியுள்ளனர்.

இதுகுறித்து எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஸ்டீபன் வாலஸ் ஒரு செய்தி வெளியீட்டில் கூறியதாவது, "எங்கள் பணி, பிளாஸ்டிக் ஒரு சிக்கலான கழிவு என்ற கருத்தை மாற்றுவதே ஆகும்.

அதற்கு பதிலாக ஒரு புதிய கார்பன் வளமாக அதன் பயன்பாட்டை நிரூபிக்க விரும்பினோம். அதில் இருந்து அதிக மதிப்புள்ள தயாரிப்புகளைப் பெற முடியும்" என்று கூறினார். இந்த ஆய்வு ஜூன் 10 அன்று Green Chemistry என்ற இதழில் வெளியிடப்பட்டது.

இந்த புதிய ஆராய்ச்சி செயற்கை உயிரியலின் தொப்பியில் மற்றொரு இறகை சேர்த்துள்ளது என்றும் கூறியுள்ளனர். இதில் விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகளை வேதியியல் செயல்முறைகளுக்கு ஏற்ப திறம்பட செயல்படும் வகையில் மறுவடிவமைப்பு செய்கிறார்கள். இது நிஜ உலக பிரச்சினைகளை தீர்ப்பதில் சக்திவாய்ந்ததாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!