நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுடன் சீன அதிபர் நேரடி பேச்சு

விண்வெளியில் இருக்கும்போது நீங்கள் செய்யும் வேலையும், உங்கள் வாழ்க்கையும் சீன மக்களின் இதயங்களில் இருக்கும் என சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார்.
                           ஜின்பிங்


பீஜிங்:

விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிற சீனா, தற்போது விண்வெளியில் விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி நிலையத்துக்கு நீ ஹைசெங், லியு போமிங், டாங் ஹோங்போ என்னும் 3 வீரர்களையும் கடந்த 17-ந் தேதி அனுப்பி வைத்துள்ளது. இது ஒரு சாதனையாக சீனாவால் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சீன விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அந்த 3 வீரர்களுடனும் அதிபர் ஜின் பிங் நேற்று பீஜிங்கில் உள்ள விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடியே முதல் முறையாக நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார். அவர்களது விண்வெளி ஆய்வுப்பணிக்காக ஜின்பிங் நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர், “நீங்கள் 3 மாதங்கள் விண்வெளியில் செலவிடுவீர்கள். விண்வெளியில் இருக்கும்போது நீங்கள் செய்யும் வேலையும், உங்கள் வாழ்க்கையும் சீன மக்களின் இதயங்களில் இருக்கும்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தொடர்ந்து அவர் விண்வெளி வீரர்களுடன் பேசும்போது, “நமது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவது ஒரு முக்கியமான மைல் கல் ஆகும். இது விண்வெளியை மனித குலத்தின் அமைதியான பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கும்” எனவும் குறிப்பிட்டார்.

3 வீரர்களும் தங்களுக்கு அளித்து வருகிற ஆதரவுக்காக ஜின் பிங்குக்கு மனமார நன்றி தெரிவித்தனர். 5 நிமிடம் நடந்த இந்த உரையாடல் சீன அரசு டெலிவிஷன் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த 3 விண்வெளி வீரர்களும் அடுத்த 3 மாதங்களில் ‘தியாங்காங் ஹெவன்லி பேலஸ்’ என்று அழைக்கப்படுகிற இந்த விண்வெளி நிலையத்தை கட்டி முடிப்பார்கள். இது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!