தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
பசியின் உச்சம்.. கிச்சன் சுவரை உடைத்து உணவு சாப்பிட்ட யானை - வைரல் வீடியோ
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
தாய்லாந்தில் உணவு தேடி கிராமத்துக்குள் புகுந்த யானை ஒன்று சமயலறை சுவற்றை உடைத்துக் கொண்டு வீட்டில் இருந்த உணவை சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வனப்பகுதியில் இருக்கும் யானைகள் உணவு தேடி வனப்பகுதியையொட்டிய கிராமங்களுக்குள் நுழைவது வழக்கமான ஒன்று. வயல்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், காய்கறிகள், வாழைகளை சாப்பிடும். ஆனால், தாய்லாந்தில் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து கிராமத்துக்கு சென்ற யானை, வீட்டின் சுவற்றை உடைத்துக் கொண்டு சமயலறையில் புகுந்து, அங்கிருக்கும் உணவுகளை எடுத்துச் சாப்பிட்டுள்ளது. இதனையறிந்த வீட்டினர் அதிர்ச்சியடைந்ததுடன், யானை வீட்டிற்குள் புகுந்ததை வீடியோ பதிவு செய்துள்ளனர்.
தெற்கு தாய்லாந்தில் சாலர்ம்கியாட்பட்டனா என்ற கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. அந்த கிராமத்துக்கு அருகாமையில் கெங் கிராச்சன் தேசிய பூங்கா உள்ளது. அந்த பூங்காவில் இருக்கும் யானைகள் அடிக்கடி உணவு தேடி அந்த கிராமத்துக்கு வருவது வழக்கம். அண்மையில், வனப்பகுதியில் இருந்து வந்த யானை நேராக ராட்சடவன் புவெங்பிரசொப்பன் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளது. மோப்ப சக்தி அதிகம் இருப்பதால், அதன் வாசனையை முகர்ந்த யானை நேரடியாக சமயலறை சுவற்றை உடைத்தது, அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டுள்ளது.
வீட்டில் திடீரென எழுந்த சத்தத்தால் அதிர்ச்சியடைந்த ராட்சடவன், தூக்கத்தில் இருந்து விழித்து சமயலறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, யானையின் தலைப் பகுதி மட்டும் தெரிவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனடியாக தன்னுடைய செல்போனை எடுத்த அவர், யானை வீட்டில் உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை படம்பிடித்துள்ளார். இது குறித்து பேசிய தாய்லாந்து வனத்துறை அதிகாரிகள், ராட்சடவன் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானையின் பெயர் பூன்சுவே எனக் கூறியுள்ளனர்.
கெங் கிராச்சன் தேசிய பூங்காவில் இருக்கும் அந்த யானை இதற்கு முன்பும் பலமுறை அந்த கிராமத்துக்குள் நுழைந்துள்ளதாகவும், உணவுக்காக செல்வது வாடிக்கையான ஒன்று எனக் கூறியுள்ளனர். அந்த கிராமத்தில் சந்தை ஒன்று இருப்பதால் அங்கு உணவுகள் கிடைக்கும் என பூன்சுவே யானைக்கு தெரியும் எனவும், அந்த சந்தைப் பகுதிக்கு அடிக்கடி செல்லும் என விளக்கமளித்துள்ளனர்.யானை வீட்டிற்குள் நுழைந்தது குறித்து பேசிய ராட்சடவன், நடு இரவில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென ஏதோ ஒன்று இடிந்து விழும் சத்தம் கேட்டதாக தெரிவித்தார்.
உடனடியாக தூக்கத்தில் இருந்து விழித்து சத்தம் வரும் பகுதியை நோக்கி ஓடியதாக தெரிவித்துள்ள அவர், சமயலறையில் யானையின் தலை மட்டும் இருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சிக்குள்ளானதாக கூறியுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் பயந்து இருந்ததாகவும், வீட்டில் யானை புகுந்ததை பின்னர் வீடியோவாக பதிவு செய்ததாக கூறியுள்ளார். வனப்பகுதியை ஒட்டிய கிராமத்துக்குள் யானைகள் புகுவது வாடிக்கை என்றாலும், வீட்டு உணவுகளை யானைகள் தேடுவது புதிதாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம். அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது. இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..? அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால்...
நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் மிகவும் பயன்படும். ஆரோக்கியமான உணவு மற்றும் சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். தொப்பையை குறைக்க மூன்று சிறந்த பயிற்சிகள்: 1. இரு கால்களையும் நீட்டி செய்யும் பயிற்சி முதலில்...
பசிக்குது ஆனா கையில் காசில்லையா? அப்போ இலவசமாகவே பிரியாணி எடுத்து சாப்பிடலாம்! பசிக்குதா எடுத்துக்குங்க..." இப்படி ஒரு போர்ட் வைக்கப்பட்டிருக்கிறது அந்த கடையில். அப்பகுதி வழியாக வருவோரும், போவோரும் கடையை பார்த்து ஒரு நிமிடம் உண்மைதானா என்று தங்களைக் கிள்ளி பார்க்கிறார்கள். அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடையில் பார்ப்போம். கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் சதீஷ், சப்ரினா தம்பதியினர். சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை கடை வைத்து வருகிறார். சப்ரினா பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கிறார். சப்ரினா தன்னுடைய வீட்டு முன்பு ஒரு சாப்பாடுக் கடை வைத்திருக்கிறார். சாலையோரமாக இருக்கும் சிறிய கடை அது. நாள்தோறும் மதியம் 12 மணிக்கு கடை திறந்தால், 3 மணி வரைதான் கடை இயங்கும். அந்த பிரியாணி கடையில், ஒரு பிளேட் பிரியாணி எவ்வளவு தெரியுமா? வெறும் 20 ரூபாய் தான். வீட்டிலேயே பிரியாணி செய்து அதை பொட்டலங்களாகக் கட்டி, கடையில் வைத்துள்ளார் சப்ரினா... அந்த ஒரு பெட்டி மீது நிறைய பிரியாணி பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். 3 மணிக்கு முன்பே அத்தனை பொட்டல...
Comments
Post a Comment