நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பல்லாயிரம் கிலோமீட்டர் நீண்ட தூரத்திற்கு பறவைகள் எவ்வாறு இடம்பெயர்கின்றன? -விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

பல்லாயிரம் கீலோமீட்டர் நீண்ட தூரத்திற்கு பறவைகள் எவ்வாறு இடம்பெயர்கின்றன? என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்தியாவில் குளிர்காலம் தொடங்கியதும் ​​உணவு மற்றும் கூடுகளைத் தேடி உலகம் முழுவதும் இருந்து 100 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இந்திய துணைக் கண்டத்திற்கு வருகின்றன. இந்த பறவைகள் ஆறுகள், பெருங்கடல்கள் மற்றும் மலைகள் வழியாக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பறந்துவருகின்ற. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சரியான பாதை மற்றும் இடத்தை அந்த பறவைகள் அறிந்து கொள்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கின்றது.

புதிய ஆராய்ச்சி ஒன்றில் பூமியின் காந்தப்புலத்தை உணரும் திறன் பறவைகளுக்கு இருக்கிறது என்று கூறுகிறது. இது நீண்ட தூர பயணத்தில் அவைகளை வழிநடத்தும் திசைகாட்டியாக செயல்படுகிறது. பறவைகள் அவற்றின் விழித்திரைகளில் அமைந்துள்ள கிரிப்டோக்ரோம்கள் எனப்படும் காந்த உணர்திறன் வாய்ந்த புரதங்களைப் பயன்படுத்துகின்றன, அவை உணர்திறன் மற்றும் சமிக்ஞை செயல்பாடுகளை செயல்படுத்துகின்றன, இவைகள் நீண்ட தூர பயணங்களுக்கு உதவுகின்றன.

நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில் புலம்பெயர்ந்த பறவைகள் வானிலையின் மாற்றத்தை எவ்வாறு உணர்கின்றன, எப்போது குடியேற வேண்டும், எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன என்பதை விளக்குகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியில் உள்ள ஓல்டன்பேர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ராபின்ஸ் என்ற பறவையை மூலம் அவைகள் நீண்ட தூரம் பயணம் செய்ய உதவும் அதனுடைய காந்த உணர்திறனை ஆய்வு செய்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!