நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கும்

பாலின விகிதத்துடன் ஒப்பிடுகையில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விவாகரத்து, பிடித்தமானவர்களின் திடீர் மரணம், வேலை இழப்பு போன்றவற்றால் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கும். இதில் நடுத்தர வயது பெண்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாலின விகிதத்துடன் ஒப்பிடுகையில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அல்சைமர் சங்கமும் ‘‘60 வயதுக்குட்பட்ட பெண்களில் 6 பேரில் ஒருவர் அல்சைமர் நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஆண்களை எடுத்துக்கொண்டால் 11 பேரில் ஒருவருக்குத்தான் அல்சைமர் பாதிப்பு ஏற்படுகிறது’’ என்கிறது.

அமெரிக்காவின் ஹான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சிந்தியா முன்ரோ, ‘‘மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது சிரமமானது. ஆனால் மன அழுத்தத்திற்கான காரணத்தை கண்டறிந்தால் அது எளிதானது. மேலும் வயதாகும்போது மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எங்கள் ஆய்வு முடிவு ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன அழுத்தம் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது. சாதாரணமாக மன அழுத்தம் ஏற்படும்போது மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் அளவு அதிகரிக்கும்.

மீண்டும் மீண்டும் மன அழுத்தம் ஏற்பட்டால் கார்டிசால் அளவு மிக அதிகமாகிவிடும். பின்பு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும். மன அழுத்த ஹார்மோன் அளவு உயர்வது நினைவுத்திறனை பாதிக்க செய்துவிடும்” என்கிறார்.

பேராசிரியர் முன்ரோ குழுவினர் 900 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் 63 சதவீதம்பேர் பெண்கள். அவர்கள் சராசரியாக 47 வயதை கடந்தவர்கள். மன அழுத்தம் நீடிக்கும்போது மூளையின் செயல்பாட்டில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!