நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் உங்ககிட்ட கூட நெருங்காது!!!

வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள். மேலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது இந்த வெந்தயத்தில். பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது.
அதுமட்டுமின்றி வெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது.
மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது.

இதனை முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் பலன்கள் இன்னும் இரட்டிப்பாகும். தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம்? இதன் நன்மைகள் என்னெ்னன என்பதை பார்ப்போம்.  

எப்படி எடுத்து கொள்ளலாம்? 

  4 ஸ்பூன் வெந்தையத்தை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். பிறகு 1 கப் தண்ணீர் எடுத்து ஊற வைத்து கொள்ளவும். இது இரவு முழுவதும் ஊற விட வேண்டும். 12 மணி நேரம் ஊறினால் போதும். தண்ணீரை வடிக்கட்டிய பிறகு 1 அல்லது 2 நாட்கள் அப்படியே முடி வைக்கவும்.  

 முளைக்கட்டிய பின் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் சாப்பிடுங்க. மதிய நேரம் சாப்பாட்டிற்கு முன் இதில் 1 ஸ்பூன் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது.  

 நன்மைகள் 

 இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரதசமாகும். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.

 இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
  சிறுநீரகம் நன்றாக செயற்பட உதவும். 

 செரிமான பிரச்சினையும் தீர்க்க உதவும். 

 மலச்சிக்கல் பிரச்சினையை சரி செய்யும். 

 உடல் எடை, வயிற்று கொழுப்பு, தொப்பை போன்றவற்றை குறைக்கும். 

 அஜீரணம் , வயிற்றுபோக்கு, வயிற்றுவலி போன்றவற்றை சரி செய்யும். 

  குறிப்பு

கர்ப்பிணி பெண்கள் மட்டும் இதனை உட் கொள்வதை தவிர்க்கவும். 


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!