நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பொம்மைக்கு முத்தம் கொடுத்த திமிங்கலம்... வைரல் வீடியோ!

திமிங்கல பொம்மைக்கு, உயிருள்ள திமிங்கலம் ஒன்று முத்தம் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


கோடிக்கணக்கான வைரல் வீடியோக்கள் இருக்கும் புதையலாக இணையம் உள்ளது. அதில் இருக்கும் ரசிக்க வைக்கும் வீடியோக்கள், ஏதாவதொரு நாளில் வைரலாகிக்கொண்டே இருக்கும். சோர்வாக இருக்கும்போது அல்லது கோபமாக இருக்கும் சமயங்களில் இந்த மாதிரியான வைரல் வீடியோக்களை பார்த்தால், மனம் நிச்சயம் அமைதிக்கு திரும்பிவிடும். அந்தவகையில், இணையத்தில் வைரலாகியிக்கும் வீடியோ ஒன்றில், பொம்மை திமிலங்கத்தை பார்த்த, நிஜ திமிங்கலம் அதனை தேடி வந்து முத்தம் கொடுப்பது காண்போரை நெகிழச் செய்துள்ளது.

அமெரிக்காவில், கன்டிக்கெட் பகுதியில் மைஸ்டிக் நீர்வாழ் உயிரினங்கள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்துக்கு பொம்மை திமிங்கலத்தை எடுத்துச் சென்ற சிறுமி ஒருவர், கண்ணாடி குளத்தில் இருக்கும் திமிங்கலத்தை பார்வையிடுகிறார். அப்போது, ஆசையாக நீந்தி வரும் பெலுகுகா திமிங்கலம், பொம்மை திமிங்கலத்துக்கு நேராக கண்ணாடியில் வாயை பிளந்து கொஞ்சுகிறது. 10 நொடிகள் இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிறுமியும் திமிங்கலம் அருகே வருவதைப் பார்த்து மிகவும் மிகழ்ச்சியடைந்து கூச்சலிடுகிறாள்.

பார்ப்பதற்கு கியூட்டாக இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்களை வெளியிடவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து சிறுமியின் தாய் பேசும்போது, "மகளின் ஆசைக்கு ஏற்ப பெலுகுகா திமிங்கல பொம்மையை வாங்கிக் கொடுத்தேன். அதன் மீது அவள் அலாதி பிரியம் கொண்டிருந்ததால் கனக்டிக்கெட் பகுதியில் நீர்வாழ் உயிரினங்கள் சரணாலயத்தில் இருக்கும் உண்மை பெலுகா திமிங்கலத்தை காண்பிக்க அழைத்துச் சென்றேன். உண்மையான பெலுகா திமிங்கலத்தைப் பார்த்தவுடன் மகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். மேலும், அவள் கையில் இருந்த பொம்மை பெலுகா திமிங்கலத்தைப் பார்த்த உண்மை பெலுகா திமிங்கலம் ஆசையாக வந்து முத்தம் கொடுத்தது. மேலும், வாயை பிளந்து அதனை அழைத்தது. பார்ப்பதற்கு கண்கொள்ள காட்சியாக இருந்தது" எனத் தெரிவித்தார்.

இதேபோல், அண்மையில் கவுகாத்தியில் ராணுவ கேம்ப் ஒன்றுக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று, இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்த கூடைப்பந்தை லாவகமாக எடுத்து விளையாடியது. இதனைப் பார்த்த இளைஞர்கள், யானை கூடைப்பந்து ஆடுவதை படம் பிடித்தனர். மேலும், பந்தை கொடுக்குமாறு கூச்சலிட்டனர். இதனை யானை துளிகூட மதிக்கவில்லை. மற்றொரு வீடியோவில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக் அருகே சென்ற யானை ஒன்று, கண்ணாடியில் மாட்டி வைக்கபட்டிருந்த ஹெல்மெட்டை பலாப்பழம் என நினைத்து எடுத்து வாயில் போட்டது. அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டப்பிறகு வாயில் போட்ட ஹெல்மெட்டை கீழே போட்டது.


also read : 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!