நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா 3-ம் அலை: குழந்தைகளை பாதுகாக்கும் வழிகாட்டுதல்கள்

கொரோனா 3-வது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
கொரோனா 3-வது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று பலர் பரிந்துரைத்தாலும், இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் (ஐ.ஏ.பி) எனப்படும் குழந்தைகளுக்கான மருத்துவ சங்கம் இதனை மறுத்துள்ளது. ‘பெரியவர்கள் மற்றும் வயதான நபர்களைப் போலவே குழந்தைகளுக்கும் இந்த வைரஸ் தொற்றுநோயை உருவாக்கக்கூடியது. ஆனால் கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும் மூன்றாவது அலை குழந்தைகளை பிரத்யேகமாக பாதிக்கும் என்பது சாத்தியமில்லாதது’ என்றும் கூறி உள்ளது.

இருப்பினும் சமீபத்திய மாதங்களில் உருமாறிக்கொண்டிருக்கும் வைரஸின் போக்கை கணிப்பது மருத்துவ நிபுணர்களுக்கு சவாலானதாக இருக்கிறது.அதனால் வைரசிடம் இருந்து குழந்தைகளை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதுதான் நல்லது. ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய ஆயுஷ் அமைச்சகம் குழந்தைகளை தாக்குவதற்கு சாத்தியமான கொரோனா அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளது. குழந்தைகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சாராம்சங்கள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகளில் யாருக்கு அதிக ஆபத்து ஏற்படக்கூடும்?

கொரோனா வைரஸ் தொற்று பொதுவாக குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஒருவேளை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருந்தால் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் உடல் பருமன், டைப்-1 நீரிழிவு நோய், நாள்பட்ட இதய நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டுடன் இணை நோய் பாதிப்பு கொண்ட குழந்தை களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் எப்படிப்பட்டதாக அமைந்திருக்கும்?

4-5 நாட்கள் தொடர்ந்து நீடிக்கும் காய்ச்சல், சாப் பிடும் அளவு குறைந்து போகுதல், ஆக்சிஜன் செறிவு 95 சதவீதத்திற்கும் கீழ் குறைதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைவது, சிறுநீர் கழிப்பதில் சிரமம், வழக்கமான சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பலுடன் காட்சியளித்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி, அடி வயிற்றில் வலி, கண்கள் சிவத்தல், உடலில் சொறி, எரிச்சல் ஏற்படுவது, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது. இந்த கொடிய வைரசிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கான சிறந்த அணுகுமுறையே வருமுன் காப்பது, சுகாதாரத்தை பின்பற்றுவதுதான் என்று வழிகாட்டுதல் நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூங்கும் நேரம்: 
குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு போதுமான நேரம் தூங்க வேண்டும். தூங்கும் நேரம் வயதுக்கேற்ப மாறுபடும்.

1 வயதுக்கும் குறைவான குழந்தைகள்:

12 முதல் 16 மணி நேரம்

1- 2 வயது :

11 முதல் 14 மணி நேரம்

3- 5 வயது:

10 முதல் 13 மணி நேரம்

6- 12 வயது:

9 முதல் 12 மணி நேரம்

டீன் ஏஜ் வயது:

8 முதல் 10 மணி நேரம்

குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாற்றங்கள்:

குழந்தைகளுக்கு குடிநீரை காய்ச்சி கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் வாய்வழி சுகாதாரத்தை பேணுவது அவசியமானது. 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் காலையில் மட்டுமின்றி இரவிலும் பல் துலக்க வேண்டும். பற்களை நன்றாக அழுத்தி தேய்த்து சுத்தம் செய்கிறார்களா? என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ‘ஆயில் புல்லிங்’ எனப்படும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதாவது ஒரு டீஸ்பூன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யை வாய்க்குள் ஊற்றி விழுங்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். முதலில் வாய் முழுவதும் எண்ணெய்யின் தன்மை வழு வழுவென்று இருக்கும். சில நிமிடங்களில் அந்த தன்மை மாறத்தொடங்கும். சுமார் 15 முதல் 20 நிமிடங்களில் எண்ணெய்யின் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். பின்பு வாயில் இருக்கும் எண்ணெய்யை கொப் பளித்துவிட்டு வெதுவெதுப்பான நீரால் மீண்டும் கொப்பளிக்க வேண்டும். ‘ஆயில் புல்லிங்’ என்பது அற்புதமான மருந்து போன்றது. நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திக்கொடுக்கும். ஆயில் புல்லிங் மூலம் வாயில் இருக்கும் மைக்ரோ மற்றும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டுவிடும். பற்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் கலந்து வாய் கொப்பளித்து வருவதும் நல்லது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இந்த வழக்கத்தை தினமும் பின்பற்றலாம்.

6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மூக்கின் நாசி துவாரங்களில் தினமும் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விடலாம். பசு நெய்யையும் உபயோகிக்கலாம்.

6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் மூக்கு துவாரங்களில் தினமும் இரண்டு சொட்டு எண்ணெய் விடலாம்.

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் இவற்றுள் ஏதாவதொரு எண்ணெய்யை பயன்படுத்தி குழந்தைகளின் உடலில் மசாஜ் செய்துவிடலாம்.

ஆயுஷ் அமைச்சக வழிகாட்டுதல்களின்படி, குழந்தை நோயை எதிர்த்துப் போராட உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதற்காக யோகா, தியானம், பிராணயாமா மற்றும் பிற பயிற்சிகளை செய்யலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதேவேளையில் குழந்தை களின் உடல் திறனுக்கேற்ப பயிற்சிகளை செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.

குழந்தைகள் சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணமாக வேண்டும். அத்தகைய உணவுகளை தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும். அவை அனைத்து சத்துக்களையும் கொண்ட சமச்சீர் உணவாகவும் அமைந்திருக்க வேண்டும்.

தினசரி வழக்கத்தில் கல்வி, பொழுதுபோக்கு, குடும்பத்துடன் செலவிடும் நேரம், விளையாடும் நேரம் ஆகியவற்றை வரையறை செய்து கொள்ள வேண்டும். முக கவசம் அணிதல், கை, கால்களை தூய்மையாக வைத்திருத்தல், அடிக்கடி சோப், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்ற செயல்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். உணவு, தூக்கம், முன்னெச்செரிக்கை நடவடிக்கை மூன்றையும் முறையாக பின்பற்றுவதும் நோய் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை தற்காத்துக்கொள்ள உதவி புரியும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!