நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தொலைக்காட்சிகளில் நொறுக்கு தீனி விளம்பரங்களுக்கு தடை விதித்தது இங்கிலாந்து

இங்கிலாந்தில் 4 வயதில் இருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதம் பேர் குண்டாக உள்ளனர். 10 வயது குழந்தைகள் 20 சதவீதம் பேர் குண்டாக உள்ளனர்.
லண்டன்:

கடைகளில் வாங்கி சாப்பிடும் பார்சல் உணவுப்பொருட்கள், நொறுக்கு தீனிகள் போன்றவற்றில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

அதில் சேர்க்கப்படும் சுவை கூட்டும் பொருட்களாலும், கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயனங்களாலும் உடல் நலத்துக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

இத்துடன் பலருக்கு தேவையற்ற சதைகள் உருவாகி உடல் குண்டாகி விடுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் பருமன் மிக அதிகமாகி விடுகிறது.

இதை தடுப்பதற்கு இங்கிலாந்து அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நொறுக்கு தீனி, பார்சல் உணவு பொருட்கள் போன்றவற்றின் விளம்பரங்கள் இங்கிலாந்தில் தாராளமாக அனுமதிக்கப்பட்டு வந்தன.

இதையும் படியுங்கள்...உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.07 கோடியைக் கடந்தது

உடல் குண்டாவதற்கு இவை காரணமாக இருப்பதாக இது சம்பந்தமான விளம்பரங்களை டி.வி.க்களில் ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வகை விளம்பரங்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை 60 சதவீதம் ஆக்கிரமித்துள்ளன.

இந்த விளம்பரங்களை இனி இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தில் 4 வயதில் இருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதம் பேர் குண்டாக உள்ளனர். 10 வயது குழந்தைகள் 20 சதவீதம் பேர் குண்டாக உள்ளனர்.

இது சம்பந்தமாக ஏற்கனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்து இருந்தார். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். மேலும் கொரோனா பரவல் உள்ள நேரத்தில் குண்டு உடல்காரர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதன் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!