நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

திமிங்கலத்திடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸான பயணிகள் - போட்டோகிராபர் சொல்லும் சுவாரஸ்ய தகவல்!

இந்த புகைப்படம் எடுத்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட எரிக், நான் மற்றொரு படகில் சில அடிகளுக்கு அப்பால் இருந்தேன். அப்போது திமிங்கலம் மேலெழும்பி வந்ததை அனைவரும் அறிவதற்குள் நான் அதனை படம் படித்தேன்.


கடந்த வருடம் ஊரடங்குக்கு முன் மெக்ஸிகோவில் உள்ள பஜா கலிஃபோர்னியா பெனின்சுலா அருகே சிலர் படகில் சென்றுள்ளனர். அப்போது திமிங்கலம் ஒன்று அவர்களது படகிற்கு பின்னால் நீரில் இருந்து வெளியே வந்து மீண்டும் உள்ளே சென்றுள்ளது.

பின்னால் வந்த படகில் இருந்த புகைப்படக் கலைஞர் எரிக் ஜே ஸ்மித், அந்த காட்சியில் தனது கேமராவில் பதிவு செய்திருந்தார். அந்த போட்டோவில் படகில் இருந்தவர்கள் இன்னொரு பக்கம் கேமராவை வைத்து தயாராக நின்று கொண்டுள்ளனர். ஆனால் திமிங்கலம் அவர்களது படகின் மற்றொரு பக்கம் சென்றுள்ளது. இந்த சம்பவம் எரிக் எடுத்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

இந்த புகைப்படம் எடுத்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட எரிக், நான் மற்றொரு படகில் சில அடிகளுக்கு அப்பால் இருந்தேன். அப்போது திமிங்கலம் மேலெழும்பி வந்ததை அனைவரும் அறிவதற்குள் நான் அதனை படம் படித்தேன். எல்லோரும் திரும்பி பார்க்கும் போது அது சரியாக உள்ளே சென்றது.

திமிங்கலத்தை புகைப்படம் எடுப்பது சுலபமான காரியமில்லை. அதற்கு அதிர்ஷ்டமும் வேண்டும். எப்பொழுதும் அலர்ட்டாகவும், தயாராகவும் இருக்க வேண்டும் என்றார். அந்த புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர, ஒரு வருடத்துக்கு பிறகு அந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.



திமிங்கலத்தின் அருகில் இல்லாததால் படகில் சென்றவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களாம். இல்லையென்றால் திமிங்கலத்தால் விழுங்கப்பட்டிருப்பார்கள். இதுபோல் கடந்த ஜூன் 11ம் தேதி இறால்களை பிடிக்கும் தொழில் செய்து வரும் 56 வயதாகும் மைக்கேல் பக்கார்டு என்பவர் கேப் கோட் பகுதியில் 45 அடி ஆழத்தில் டைவிங் செய்துகொண்டிருந்தார்.

அப்போது திமிங்கலம் ஒன்று விழுங்கியுள்ளது. முதலில் அவர் சுறாவுக்கு இறையாகி விட்டதாக நினைக்க, பின்னர் தான் அவருக்கு தான் திமிங்கலத்தால் விழுங்கப்பட்டிருக்கிறோம் என தெரியவந்திருக்கிறது. பின்னர் 30 நொடிகளில் அவரை மீண்டும் திமிங்கலம் வெளியில் கக்கியுள்ளது.


பின்னர் அவரை அப்பகுதியில் மீன் பிடித்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடலில் காயங்கள் இல்லை என்றாலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பொதுவாக திமிங்கலங்களை விழுங்காது எனவும், மீன்களைப் பிடிக்க முயற்சித்த போது அவரை தெரியாமல் விழுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

திமிலங்கத்தால் விழுங்கப்பட்டது குறித்து பேக்கார்ட் தெரிவித்ததாவது, முதலில் நான் சுறாவால் விழுங்கப்பட்டதாக நினைத்தேன், பின்னர் தான் அது திமிங்கலம் என்று உணர்ந்தேன் என்று தெரிவித்தார்.


அப்போது என் வாழ்க்கை அவ்வளவு தான் என முடிவு செய்து என் மனைவி மற்றும் குழந்தைகளைப் பற்றி நினைத்துக்கொண்டேன். ஆனால் சில நிமிடங்களில் திமிங்கலத்தால் தூக்கி வீசப்பட்டு கடல் பகுதியில் மிதந்துகொண்டிருந்தேன் என்றார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!