Posts

Showing posts from December, 2021

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இன்ஸ்டாகிராம் பதிவுகளை மறைக்க சுலப வழிகள்! பதிவை அழிக்க வேண்டாம்!

Image
  இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகள் இடுவது சுலபம். ஆனால் அதை மறைப்பது கடினம். போட்ட பதிவுகளை நீக்காமல், அது பிறருக்குத் தெரியாமல் மறைப்பது எளிதானதே... இன்ஸ்டாகிராம் இணையத்தின் மிகவும் பிரபலமான சமூக வலைப்பின்னல் பயன்பாடுகளில் ஒன்றாகும். பயனர்கள் தங்கள் கணக்குகளில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிர்கின்றனர்.  ரீல்ஸ், ரீல்ஸ் ரீமிக்ஸ், லிங்க் ஸ்டிக்கர்கள் என பல புதிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இருப்பினும், உங்கள் சுயவிவரத்திலிருந்து சில இடுகைகளை அனைவரும் பார்க்க வேண்டாம் என விரும்பலாம். அவை நீக்க முடியாத அளவுக்கு சிறந்தவையாக இருக்கும் போது, பதிவை நீக்குவதற்கும் தயக்கம் இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,  உங்கள் Instagram கணக்கில் இருந்து பதிவுகளை நீக்காமல் மறைக்க அனுமதிக்கிறது இன்ஸ்டாகிராம் காப்பகம். இதனால், உங்கள் காப்பகத்தில் அந்த குறிப்பிட்ட பதிவு இருக்கும், அதை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். காப்பகப்படுத்தப்பட்ட பதிவையும் தேர்வுசெய்து, எப்போது வேண்டுமானாலும் அனைவரின் பார்வைக்காகவும் பொதுவில் பதிவிடலாம்.   உங்கள் இன்ஸ்

பி.டி உஷா போலவே ஓடும் குரங்கு! இரு கால்களில் பறக்கும் குரங்கின் ஓட்டச் சேட்டை!

Image
  அதிர்ச்சியையும், ஆசுவாசத்தை கொடுக்கும் குரங்கு சேட்டை வீடியோ இது. கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழியை உண்மையாக்கும் வீடியோ இது... ப ல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன, அவை மக்களுக்கு சிலிர்ப்பை மட்டுமல்ல, அதிர்ச்சியையும், ஆசுவாசத்தை கொடுக்கின்றன. அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டப் பந்தய வீரரைப் போல ஓடும் குரங்கின் வீடியோ, அதிர்ச்சியையும், ஆசுவாசத்தை கொடுத்து குரங்கு சேட்டை என்று சொல்லவும் வைக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழியை உண்மையாக்கும் இந்த வீடியோவில், முழு வேகத்தில் ஓடுவதைக் காணலாம். மலைப்பகுதியில் சாலை ஓரத்தில் குரங்கு ஒன்று அதிவேகமாக ஓடுவது வைரலாவதற்கு காரணம் என்ன தெரியுமா? குரங்கு இரண்டு கால்களை மட்டுமே பயன்படுத்தி ஓடுகிறது. உண்மைதான், மனிதன் ஓடுவது போல் குரங்கு இரண்டு கால்களிலும் ஓடுவதை பார்க்கவே பயமாக இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்று குரங்கு ஓடும்போது பயமாய் இருக்கிறது. மலைப்பாதையில் தடுப்பு சுவரில் வேகமாக ஓடும் குரங்கு பி.டி. உஷாவைப் போல வேகமாக ஓடுகிறது. இந்த குரங்கு சிறு தவறு செய்திருந்தாலும், ஒரு அடி தவறியிருந்தாலும் கூட,

உடற்பயிற்சி செய்யாமலே ஆரோக்கியமாக இருக்கவேண்டுமா?

Image
  தினமும் உடற்பயிற்சி செய்வது போரடிக்கிறதா? சோம்பேறித்தனமாக உணர்ந்தால், சில எளிய முறைகளை பின்பற்றி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.  ஆரோக்கிய குறிப்புகள் விறுவிறுப்பான நடைபயிற்சி வீட்டை நீங்களே சுத்தம் செய்யுங்கள் தி னமும் உடற்பயிற்சி செய்வது போரடிக்கிறதா? சோம்பேறித்தனமாக உணர்ந்தால், சில எளிய முறைகளை பின்பற்றி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.  பிஸியான வாழ்க்கை முறையால், உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுகிறது. மறுபுறம், நாள் முழுவதும் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்காது என்பது கவலையைத் தரும் விஷயம். அதுமட்டுமல்லாமல், நாற்காலியில் அமர்ந்தே வேலை செய்தும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. பிஸியான வாழ்க்கை முறையால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனால் அல்லது உடற்பயிற்சி செய்ய சோம்பலாக இருந்தால், இந்த சுலபமான டிப்ஸ்களைப்  பின்பற்றி சுறுசுறுப்பாக இருக்கவும். நடை பயிற்சி உடல் சுறுசுறுப்பாக இல்லாவிட்டால் பல வகையான நோய்கள் வந்துவிடும். தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் நேரம் கிடைக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் தினமும் நடைபயிற

HAPPY NEW YEAR 2022

Image
  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022 HAPPY NEW YEAR 2022 HAPPY NEW YEAR 2022 HAPPY NEW YEAR 2022

2022ம் ஆண்டு பிறந்தது- ஆங்கில புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்து

Image
 ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்ததுடன், சமூக வலைத்தளங்கள் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பூ மிப் பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, மறுமுனையில் இரவாக இருக்கும். அவ்வகையில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக உள்ளது. இதன் அடிப்படையில் ஆங்கில புத்தாண்டு பிறப்பும் அமைகிறது.  இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், நியூசிலாந்தில் இந்திய நேரப்படி இன்று மாலையிலேயே புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும் லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டியது. நகரமே வண்ணமயமாக காட்சியளிக்கிறது.  2022-ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.  இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாடப்பட

ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி?

Image
  பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கண்ணுக்கு புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை கண்டறிவது எப்படி என்று அறிந்து கொள்ளலாம். பெ ண்கள் பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அங்கு சில அயோக்கியர்களால் அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்கு புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம். முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் செல்போனில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் செல்போனில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில் உள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள். இப்போது புகைப்படத்தை கவனியுங்கள்.   ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும். இதை வைத்து அறையினுள் ரகசிய கேமராக்கள் பொருத்தியுள்ளதை அறியலாம். ALSO READ :  அறிவியல் உலகில் தடம் பதித்த பெண்கள்......

அறிவியல் உலகில் தடம் பதித்த பெண்கள்......

Image
  நோபல் பரிசு வென்றது முதல் நாசாவிற்கு செல்வது வரையிலும் பெண்கள் வரலாற்றில் தங்களது பெயர்களை இடம்பெற செய்துள்ளனர். அ றிவியலில் எட்ட சாத்தியமில்லாததாக கருதப்பட்ட உச்சத்தையும் பெண்கள் எட்டியுள்ளனர். நோபல் பரிசு வென்றது முதல் நாசாவிற்கு செல்வது வரையிலும் பெண்கள் வரலாற்றில் தங்களது பெயர்களை இடம்பெற செய்துள்ளனர். அந்த வகையில் அறிவியலில் உலகின் தலைசிறந்த ஏழு பெண் கண்டுபிடிப்பாளர்களை பற்றி பார்ப்போம். மேரி கியூரி     கதிரியக்கம் தொடர்பான மேரி கியூரியின் கண்டுபிடிப்புகள் அவரை சர்வதேச அளவில் பிரபலமாக்கியது. இயற்பியல் மற்றும் வேதியியல் என இருவேறு துறைகளுக்கான நோபல் பரிசை பெற்ற முதல் விஞ்ஞானி மேரி கியூரி. பெக்கி விட்சன் பெக்கி விட்சன் உயர்நிலைப்பள்ளியின் இறுதி ஆண்டில் படித்து கொண்டிருந்த போது நாசா அதன் முதல் பெண் விண்வெளி வீராங்கனைகளை தேர்ந்தெடுத்தது. நிலவில் தரையிறங்கும் அவருடைய கனவு நனவானது. பெக்கி விட்சனும் ஒரு விண்வெளி வீராங்கனை. மேரி தர்ப் 1953-ல் அட்லாண்டிக் கடலின் அடித்தளத்தின் வரைபடத்தை உருவாக்கிய முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றவர் மேரி தர்ப். வாண்டா டயஸ் மெர்சிட் தரவு புலனுணர்வு

மென்மையான கதர் சில்க் புடவைகள்...

Image
  மென்மையான கதர் சில்க் புடவைகளைப் போலவே செமி காதி சில்க் புடவைகளும் பெண்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற புடவைகள் என்று சொல்லலாம்.                                               மென்மையான கதர் சில்க் புடவைகள்... புடவை களின் தனித்துவத்தை கூறவந்திருப்பவை மென்மையான காதி சில்க் புடவைகள் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் அணிவதற்கு மிகவும் வசதியாக வந்திருப்பவை இவ்வகை புடவைகள் என்று சொன்னால் அது மிகையாகாது. சாஃப்ட் கதர் சில்க் புடவைகளின் அழகை இன்று முழுவதும் வர்ணிக்கலாம். ஆம்.பிளெயின் வண்ணத்தில் உடல் இருக்க பூக்கள் போட்ட பார்டர்கள் இரண்டு புறமும் வருவதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புடவைகளில் பல்லு மிகவும் குறைவாக அதாவது ஷார்ட்டாக இருப்பது போல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பல்லுவின் ஓரங்களில் சுங்கங்கள் (டேஸில்கள்) தொங்குவது போல் தயாரித்திருக்கிறார்கள். உடல் பாகம் முழுவதும் மஞ்சள், பச்சை, நீலம் அல்லது சிவப்பு என ஏதாவது ஒரு நிறத்தில் இருக்க அதற்கு காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் பூப்போட்ட பார்டர்கள் மற்றும் பல்லுவானது அமைந்து பூப்போட்ட பிளவுஸ் துணியும் இணைக்கப்பட்டு வந்திர

திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் எவற்றில் கவனம் செலுத்த வேண்டும்...

Image
  பெண்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருமண நாளுக்கு தயாராகும் பெண்கள், எவற்றில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்ப்போம். 1. சரும பராமரிப்பு: திருமணத்தன்று ஒப்பனை செய்துகொண்டாலும், அழகை மேம்படுத்திக்காட்டுவதற்கு சரும ஆரோக்கியம் முக்கியமானது. திருமண நாளுக்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே, முறையான சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். இது திருமண நாளின்போது முகத்தின் பொலிவை அதிகரிக்கும். மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையோடு பகல் மற்றும் இரவு நேர சரும பராமரிப்பு முறைகளை செய்ய வேண்டும். ரசாயனப் பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களுக்கு பதிலாக, இயற்கை முறையில் தயாரித்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது.            2. உணவில் கவனம் தேவை: விலை அதிகமான கிரீம்கள், பேஸ் பேக்குகள் போன்றவற்றை வெளிப்பூச்சாக பயன்படுத்தினாலும், நாம் உட்கொள்ளும் சத்தான உணவில்தான் சருமத்தின் உண்மையான ஆரோக்கியம் அடங்கியுள்ளது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகளை தவிர்த்து காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வ

2021-க்கு டூடுல் போட்டு பிரியா விடை கொடுத்துள்ள கூகுள்!

Image
  உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் தனது தேடு பொறியான கூகுள் தளத்தில் முக்கிய நிகழ்வுகளை டூடுல் போட்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த சில மணி நேரங்களில் 2021-ஆம் ஆண்டு நிறைவு பெற உள்ள சூழலில் அதனை குறிப்பிடும் வகையிலும், 2022-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையிலும் 2021-க்கு டூடுல் போட்டு பிரியாவிடை கொடுத்துள்ளது கூகுள்.  உலக மக்களுக்கு மிகவும் சவாலானதாக நிறைந்த 2021-க்கு விடை கொடுத்து 2022-இல் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் அனைவரையும் கவரும் வகையில் க்யூட்டான டூடுல் போட்டுள்ளது கூகுள்.  அந்த டூடுலை க்ளிக் செய்தால் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.  புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் மக்கள் கூடி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உறை பனியில் உணவின்றி சிக்கியவர் உயிர் பிழைத்த அதிசயம்........

Image
  சாகச நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல்களில் மட்டுமே உயிர் பிழைத்திருப்பதற்காக (சர்வைவல்) ஒருவர் மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளை நாம் பார்த்திருப்போம். இத்தகைய சூழலில் அமெரிக்காவின் வாஷிங்டனில் உறை பனியில் உணவின்றி சிக்கியவர் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நடந்துள்ளது.  68 வயதான லின்னல் மெக்ஃபார்லேண்ட் (Lynnell McFarland) தனது உறவினருக்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு, தனது Mitsubishi காரில் வீடு திரும்பியுள்ளார். அந்த காரை அவர்தான் ஓட்டி வந்துள்ளார். அப்போது அவரது கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்திற்குள் தலைக்குப்புற நிலையில் விழுந்துள்ளது. அதனால் கை மற்றும் மூட்டு பகுதிகளில் எலும்பு முறிவு அவருக்கு ஏற்பட்டுள்ளது. உடலை உறைய செய்யும் அந்த பனியில் அவருக்கு உதவ யாரும் இல்லை.   இருப்பினும் தனது சீட் பெல்டை கழட்டி கொண்டு, அவரால் காரின் பின் பக்கத்தில் வந்து பத்திரமாக இருக்க முடிந்திருக்கிறது. அதே நேரத்தில் அவரால் அவரது செல்போன், தண்ணீர் பாட்டில் என எதையும் எடுக்க முடியவில்லை. எலும்பு முறிவினால் அவர் இருந்த இடத்திலிருந்து

முதலையை ஓரங்கட்டி வெற்றி பெறும் ஆமை வீடியோ வைரல்!

Image
  கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்ற பழமொழியை மட்டுமல்ல, முயல்-ஆமை கதையையும் நிரூபிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகிறது.  ச மூக ஊடகக்களில் பல்வேறு வீடியோக்கள் வைரலானாலும், விலங்குகளின் சுட்டித்தனங்களும், கொடூரமும் அதிக அளவில் வியப்புடன் பார்க்கப்படுகின்றன.  விலங்குகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. விலங்குகள் தொடர்பான வீடியோக்களை மக்கள் விரும்புகிறார்கள். ஒரு சிறிய விலங்கு தன்னை விட பெரிய மற்றும் பயங்கரமான விலங்குகளை மிஞ்சும்போது மக்களுக்கு மிகவும் பிடிக்கிறது. மக்கள் அத்தகைய வீடியோக்களை மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.  இன்ஸ்டாகிராமில் தற்போது அப்படி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.  அண்மையில் வெளியாகிய வீடியோ ஒன்றில், அச்சமடைந்த முதலை சிறிய ஆமைக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பதை பார்க்க முடிகிறது. கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்ற பழமொழியை மட்டுமல்ல, முயல்-ஆமை கதையையும் நிரூபிக்கும் இந்த வீடியோவில், முதலையின் வாயிலிருந்து உணவைப் பறிக்கும் காட்சி பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. குளத்தின் கரையில் ஒரு பெரிய முதலை இருப்பதை

ரேஸ் டிராக்கில் காற்றில் பறந்த கார்! மயிர் கூச்செறியும் கார் பந்தய வீடியோ!

Image
  கார் பந்தயத்தை படம் எடுத்துக் கொண்டிருந்த பெண், இந்த எதிர்பாராத விபத்தையும் பதிவு செய்தார். இந்த விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. ரேஸ் டிராக்கில் காற்றில் பறந்த கார் பந்தயப் பாதையில் கார்கள் மோதல் வீடியோ எடுத்தப் பெண் மயிரிழையில் உயிர் பிழைத்தார் நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோவைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படும். கார் பந்தயத்தை படம் எடுத்துக் கொண்டிருந்த பெண், இந்த எதிர்பாராத விபத்தையும் பதிவு செய்தார். இந்த விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. கார் பந்தயம் மிகவும் பிரபலமான விளையாட்டு, மிகவும் பரபரப்பானது. கார் பந்தயத்தை விரும்புபவர்கள் அனைவருக்கும் அதில் உள்ள ஆபத்தும் நன்றாகவேத் தெரியும். கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்படும் விபத்து ஏற்படுத்தும் காயங்களும், பாதிப்பும் யாராலும் கணிக்கவே முடியாது. பந்தயப் பாதையில் செல்லும் கார்கள் மோதும் போது, ​​உயிருக்கே ஆபத்தாகிறது. அப்படிப்பட்ட மயிர் கூச்செறியும் ஒரு வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கார் பந்தயத்தின் போது விபத்து நெஞ்சை பதற வைக்கும் இந்த காணொளியை பார்த்தவுடன் உங்களுக்கு மயி

அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் தரும் ஸ்ட்ராபெர்ரி.......

Image
  சுவையும், மணமும் கொண்ட ஸ்ட்ராபரிப் பழம் சருமத்தைச் சுத்தப்படுத்துவதோடு, செரிமாண உறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. நமது உணவில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பது பழங்கள். பழங்களில் பல நன்மைகள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் சில சிறப்புப் பண்புகள் இருக்கும். அதில் ஸ்ட்ராபெர்ரிப் பழம் முக்கியமானது. சருமத்தின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும் தேவையான சத்துக்கள் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ளது. இதே பண்பு, ரத்தத்தில் செல் அழிவை தடுக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, நார்ச்சத்துக்கள், வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பல அவசியமான சத்துகள் ஸ்ட்ராபெர்ரி யில் உள்ளது. அதுமட்டுமல்ல, வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், வைட்டமின் ஏ (Vitamin A), சையனோகோபாலமின், டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற விட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின்,  பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ள

2022 ஆம் ஆண்டு பயங்கரமாக இருக்கும்! இந்தியாவுக்கான பாபா வெங்காவின் கணிப்பு........

Image
  1996 ஆம் ஆண்டு இறப்பதற்கு முன்பே, ​​5079 ஆம் ஆண்டு இந்த உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துள்ளார் என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. Baba Vanga Predictions 2022:  2021 ஆம் ஆண்டு நம்மை கடந்து செல்கிறது. இன்னும் ஒருசில நாட்களுக்குப் பிறகு புதிய ஆண்டு நம்மை வரவேற்க உள்ளது. இதற்கிடையில், அல்கொய்தாவின் 9/11 தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவில் சுனாமி வரை துல்லியமாக கணித்த பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வெங்கா (Baba Vanga), 2022 ஆம் ஆண்டில், கொரோனாவிலிருந்து ஒரு கொடிய வைரஸ் வரும் என்று எச்சரித்துள்ளார். இதுமட்டுமின்றி புத்தாண்டில் வேற்றுக்கிரகவாசிகள் பூமியை தாக்கலாம் என்றும் கணித்துள்ளார். வெட்டுக்கிளி தாக்குதல் இந்தியாவில் பட்டினியை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சியையும் தந்துள்ளார். பாபா வெங்கா பால்கன் பிராந்தியத்தின் நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus) என்றும் அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்கேரியாவை சேர்ந்த பாபா வெங்காவின் உண்மையான பெயர் வெங்கலியா பாண்டேவ சுர்சேவா. பாபா வெங்கா 1911 ஆம் ஆண்டு பிறந்தார் மற்றும் அவர் 1996 இல் இறந்தார். 12 வயதில், பாபா வெங்கா கடும

Molnupiravir: கொரோனா மருந்தை எங்கே வாங்கலாம்; விலை என்ன..!!!

Image
  சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனா மருந்தான மோல்னுபிராவிர் என்ற மாத்திரையின் விலை, சந்தையில் பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம். கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தான் மோல்னுபிராவிர் இன்று முதல் இந்திய சில்லறை மருந்து சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தின் பயன்பாட்டிற்கு அரசாங்கம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது அனைவரும் அறிந்ததே. மருந்தின் விலை இந்த மருந்தின் விலையைப் பற்றி கூறுகையில், மருந்துக் கடையில் மோல்னுபிரவீர் கேப்ஸ்யூல் ஒன்று, 63 ரூபாய்க்கு  கிடைக்கும். ஆனால், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின் அடிப்படையில் மட்டுமே மருந்தை விற்பனை செய்ய முடியும் என்று மருந்து கடைகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மோல்னுபிரவீர் மருந்துக்கு அனுமதி கிடைத்தது மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) நிபுணர் குழு சமீபத்தில் அவசரகாலச் சூழ்நிலைகளில் கொவிட் மருந்தான மோல்னுபிராவிர் மாத்திரையை  சிகிச்சைக்கு உபயோகிக்க பரிந்துரைத்தது. மருந்துகள் நிபந்தனைகளுடன் விற்கப்படும் கோவிட்-19 அவசரநிலை மற்றும் மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நாட்டில் அவசரகா

35 ஆண்டுகளாக கர்ப்பமாக இருந்த 73 வயது பாட்டி, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுப்பு...

Image
73 வயது பாட்டி 35 ஆண்டுகளாக கர்ப்பமாகவே இருந்துள்ளார். அவர் வயிற்றிலிருந்த கல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம்அகற்றப்பட்டது. இதுகுறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள். 73 வயது பாட்டி 35 ஆண்டுகளாக கருவில் சுமந்த குழந்தையை டாக்டர்கள் ஆப்ரேஷன் மூலம் அகற்றினர். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. அல்ஜிரியாவைச் சேர்ந்த 73 வயது பாட்டி ஒருவருக்கு சமீபத்தில் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் அவரது வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றில் குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது. எப்படி 73 வயது பாட்டிக்கு கருத்தரித்தது என யோசித்து அடுத்தகட்ட சோதனைகளை செய்து போதுதான் பெரும் ஆச்சிரயமே காத்திருந்தது. பாட்டியின் வயிற்றில் குழந்தை உருவாகி அந்த குழந்தை கல்லாக மாறியுள்ளது. அதுவும் இந்த கரு உருவாகி 35 ஆண்டுகளாகிறது. சுமார் 2 கிலோ எடை கொண்ட இந்த கல் குழந்தை 7வது மாதம் வரை வளர்ச்சியடைந்து கல்லாக மாறியுள்ளது. இந்த செய்தி பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.பலர் இது எப்படி சாத்தியம் என கேட்கிறார்கள். ஆனால் மருத்துவரீதியில் இது சாத்தியமான ஒன்று தான். எப்படி சாத்தியம்? மருத்துவ உலகில் இவ்வற

இளம்பெண்கள் விரும்பி அணியும் ஸ்டைலிஷான ஜீன்ஸ் வகைகள் என்னென்ன?

Image
 இன்றைய இளம் பெண்கள் விரும்பி அணியும் உடைகளில் ஒன்று தான் ஜூன்ஸ். இதில் நிறைய வகைகள் உள்ளது, அதில் பெண்களுக்கு பிடித்தமான உடைகள் எனென்ன என்பதை பற்றி பார்ப்போம். Slim fit இந்த வகையான ஸ்கின்னி ஜீன்ஸ் மற்றும் ஸ்டிரெய்ட் கட் ஜீன்ஸ்களி-ன் கலவை ஆகும். இடுப்பு மற்றும் தொடை பகுதியை அணைத்தவாறும், கணுக்கால் பகுதியில் சிறிது தளர்வாகவும் இருக்கும். இணிவதற்கு சவுகரியாக இருக்கும். அனைத்து வகை டி-ஷர்ட்களுக்கும் பொருந்தும். Skinny jeans இந்த வகையானது பார்க்க ஒல்லியாக தெரிந்தாலும் உடுத்துவத்ற்கு சவுகரியமாக இருக்கும் வகையில் இந்த ஜீன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை, இடுப்பில் இருந்து கணுக்கால் வரை அணைத்தபடியே வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இதன் இழுவை தன்மையால் உடல் அசைவிற்கு ஏற்றார் போல் இருக்கும். மேலும், ஹீல்ஸ் போன்ற காலணிகளோடு சேர்த்து அணிவதற்கு ஏதுவாக இருக்கும். நீளமான கால்கள் உடைய பெண்களுக்கும், ஒல்லியான உடலமைப்பு உடைய பெண்களுக்கும் பொருத்தமாக இருக்கும். Bootcut jeans இந்த ஜீன்ஸ் பொறுத்தவரையில், பூட்ஸ் போன்ற காலணிகளுடன் அணிவதற்கு இது ஏதுவாக இருக்கும். இடுப்பில் இருந்து தொடை வரை சற்று பிடித்தவாறும், முழங

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!