நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆறும், அருவிகளும் கூட உறைந்து நிற்கும் அற்புத காட்சிகள்! வைரல் புகைப்படம் இதோ......

 காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது தட்பநிலை பூஜ்ஜிய டிகிரியை எட்டியுள்ள நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஏரி, ஆறு, அருவிகள் என அனைத்தும் உறைந்து நிற்பதை பார்த்து சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதன் கிழமை முதல் காஷ்மீரில் கடுமையான குளிர் காலம் தொடங்கியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரியை தொட்டுள்ளது. ஸ்ரீநகரில் இரவு வெப்பநிலை மைனஸ் 6 டிகிரியாகவும், குல்மார்க்கில் மைனஸ் 9 டிகிரியாகவும் இருந்தது.

சுமார் 40 நாட்கள் நீடிக்கும் கடும் குளிர் காலம் டிசம்பர் 21ஆம் தேதி துவங்குகிறது. இந்த காலகட்டத்தில் கடுமையான குளிர் நிலவும். குறைந்த பட்ச தட்ப நிலை பூஜ்ஜியத்திற்கு கீழே இருக்கும்.


காஷ்மீர் பள்ளத்தாக்கில் குளிர்காலத்தின் தாக்கம் அதிகரித்தவுடன் இங்குள்ள பல ஏரிகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் முற்றிலும் உறைந்துவிட்டன.

குல்மார்க்கின் புகழ்பெற்ற டிராங் நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைந்துவிட்டது. இங்கு வெப்பநிலை மைனஸுக்குக் கீழே சென்றுவிட்டது. நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து, திரைப்படங்களில் மட்டுமே பார்த்த காட்சிகளை நேரில் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த இடம் குளிர்கால அதிசயம் என்று அழைக்கப்படுகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே இருக்கும் என்றும் மேலும் தட்ப நிலை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


also read : 1500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் விழுந்த மோதிரம்: தற்போது அதில் தெரியும் உருவத்தால் அதிர்ச்சி........

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!