நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொழுப்பை கரைக்க சுவையான சூப்! ஒரே ஒரு வாரத்தில் மாற்றம்... இதோ தயாரிப்பு..........

 எடை குறைப்பு என்பது இன்று பலருக்கு கனவாகி விட்டது.


 உடல் எடையை வேகமாகக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் முட்டைகோஸ் சூப் குடியுங்கள்.


ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தினை உணரலாம்.


தேவையான பொருட்கள்


  1. முட்டைகோஸ் - 1 கப்
  2. இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  3. மிளகு - 1 ஸ்பூன்
  4. சீரகம் - 1 ஸ்பூன்
  5. எண்ணெய் - தேவையான அளவு
  6. உப்பு - தேவையான அளவு

செய்முறை


முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் இதனுடன் நறுக்கிய முட்டைகோஸ், தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதித்து வாசம் வந்ததும், இறக்கி பரிமாறினால் முட்டைகோஸ் சூப் தயார் !!!



also read : Food: 2021ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி! நிமிடத்திற்கு 115 ப்ளேட்........

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!