நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வியர்வை நாற்றத்தைப் போக்க இதை செய்தா போதும்...

 வியர்வை நாற்றத்தைப் போக்க இதை செய்தா போதும்...

என்ன செய்தாலும் போகாத வியர்வை நாற்றத்துக்கு தற்காலிக ஆறுதல்கள் வாசனைதிரவியங்கள் தான் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் இதையெல்லாம் செய்யுங்கள். வியர்வை நாற்றமா? என்னிடமா என்று கேட்பீர்கள்?


மஞ்சளும் மணமும் வியர்வை நெடியும்

கிருமி நாசினியான மஞ்சள் கிழங்கை உரசி அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் கமழும்.


 


தக்காளி குளியலும் வியர்வை நீக்கமும்

ஒரு பக்கெட் தண்ணீரில் தக்காளியைப் பிழிந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் ஓடிப்போகும்.


நாற்றமே இல்லையே

தக்காளி, கற்றாழை, எலுமிச்சை எல்லாம் போட்டதும் வியர்வை நாற்றம் மொத்தமா குறையலேன்னாலும் படிப்படியா குறையவாவது செய்யுதே என்று ஃபீல் செய்வீர்கள்.


புதினாவும் புத்துணர்ச்சியும்

புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்துவந்தால் வியர்வை வாடையும் இருக்காது. நறுமணம் வீசும் புத்துணர்ச்சியோடு நாள் முழுக்க வலம் வருவீர்கள்.


எலுமிச்சை போதும் வியர்வை போகும்

குளிக்கும் நீரில் எலுமிச்சைச் சாறு பிழிந்து குளித்து வந்தால் உடலில் இருக்கும் துர்நாற்றம் நீங்கும். அக்குளில் வெளிவரும் கெட்ட வாடையை நீக்கி நல்ல மணமூட்டியாக இருக்கும்.


வியர்வை வாடையைப் போக்குமா டியோடரன்ட்

உடலுக்கு நறுமணம் கொடுக்கும் வாசனை திரவியங்கள், பூச்சுகள் எல்லாமே தற்காலிகமானவை. குறிப்புகளில் இருப்பதைப் பயன்படுத்தி இயற்கை முறையில் வாடை போக்குவது நல்லது.


தயிரும் வியர்வை நீக்கியே

அக்குளில் அதிகப்படியான நாற்றம் இருந்தாலும் கெட்டியான பசுந்தயிரைக் குழைத்து அக்குள் மற்றும் உடல் எங்கும் பூசி குளித்து வந்தால் வியர்வை வெளியேறி விடுவதோடு சருமத்தின் அழகு அதிகரிக்கும்.


கெட்ட வாடை நீக்கும் கற்றாழை சாறு

கற்றாழையை எப்போது வேண்டுமானாலும் அக்குளில் தடவி கொள்ளலாம். வெளியில் செல்லும் போதும் கூட. நாள் முழுவதும் வியர்வை வாடையிலிருந்து உங்களைத் தள்ளி வைக்கும்.


ஐயோ நாற்றம் குடலைப்புடுங்குது

நீங்கள் பத்தடி தூரத்தில் வரும் போதே என்ன நாற்றம் இது என்றபடி மூக்கை பிடித்துகொண்டு ஒருவர் விலகினால் வியர்வை வாடை தூக்கி அடிக்கிறது என்று பொருள்.




ALSO READ : இளஞ்சிவப்பு உதட்டுக்கு கிவி தயிர் லிப் மாஸ்க், இப்படி யூஸ் பண்ணுங்க, ஷைனிங் லிப்ஸ் கிடைக்கும்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!