நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குஷ்பு 2.0: அன்று கொண்டையில் தாழம்பு, இன்று கொண்டையில் பாம்பு!!

 சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பெண் ஒருவர் தலையில் பாம்புடன் மாலில் சுற்றித் திரியும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பாம்பை ஹெட் பேண்டாக சுற்றிக்கொண்டு மாலில் உலா வரும் அந்த பெண்ணின் தலையை ஒருவர் கூட கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

‘snake._.world' என்ற பயனரால் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டது. இந்த வீடியோவுக்கு இதுவரை 15,400 வியூஸ்களும் 750 லைக்குகளும் கிடைத்துள்ளன. 

இந்த வித்தியாசமான வீடியோவில் , தலையில் ஒரு சிறிய பாம்புடன் ஒரு பெண் சர்வ சாதாரணமாக ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைவதைக் காண முடிகின்றது. தனது தலைமுடியை ஒரு கொண்டயாக போட்டு அந்த கொண்டைக்கு ஒரு பேண்டைப் போல, அதில் ஒரு பாம்பையும் சுற்றி வைத்துள்ளார். 

அந்த பெண்ணை ஒருவர் படமெடுக்க அவர் மாலில் ஒய்யாரமாக நடமாடத் தொடங்குகிறார். அந்த பெண் தனது கொண்டையில் சுற்றியிருப்பது ஒரு உண்மையான பாம்பு என யாரும் அடையாளம் காணவில்லை. பாம்பின் தலைப்பகுதி நன்றாகத் தெரிந்தாலும், யாரும் அதை கவனிக்கவில்லை. 

வீடியோவில், ‘யாருக்கும் தெரியப்போவதில்லை’ என ஒருவர் கூறுவதையும் கேட்க முடிகிறது. அவர் கூறுவது போலவே பெண்ணின் கொண்டையில் ஒய்யாரமாய் சுற்றியிருக்கும் பாம்பை யாவும் கண்டுகொள்ளவில்லை.

பாம்பால் ஆன 'அசாதாரண' ஹேர்பேண்டை யாரும் கவனிக்காத இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெண்ணின் தலையில் பாம்பு நன்றாக தெரிந்தும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது. 

இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. ஒரு பயனர் நகைச்சுவையாக, "வழக்கமான ரப்பர் பேண்டுகளை விட, இந்த பாம்பு இந்த வேலையை நன்றாக செய்கிறது” என எழுதியுள்ளார். 

“யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மிக ஆச்சரியமாக உள்ளது” என ஒரு பயனர் ஆச்சரியப்பட, மற்றொருவரோ, “ நான் அங்கிருந்தால் இதை கண்டுபிடித்திருப்பேன். என்னால், எவ்வளவு தொலைவிலிருந்தும் பாம்புகளை கண்டுபிடிக்க முடியும்” என தன் புகழ் பாடியுள்ளார். 

பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கும் அந்த வினோத வீடியோவை இங்கே காணலாம்: 






Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!