நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் முட்டை சேர்க்காத ஃப்ரூட் கேக்.........

 கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஃப்ரூட் கேக்கை வீட்டிலேயே செய்து சுவைத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுங்கள்.


                                               முட்டை சேர்க்காத ஃப்ரூட் கேக்



தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்     

வெண்ணெய் - 1/2 கப்


நாட்டுச் சர்க்கரை - 1/2 கப்


பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்


பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன் + 1/8 டீஸ்பூன்


மசாலா பொடி - 1/2 டீஸ்பூன் (1 கிராம்பு, 1 பட்டை மற்றும் சிறு துண்டு ஜாதிக்காய்)


தேன் - 1/2 டேபிள் ஸ்பூன்


தயிர் - 3 டேபிள் ஸ்பூன்


வெனிலா எசன்ஸ் - 1/2 + 1/4 டீஸ்பூன்


தண்ணீர் - 1/2 கப்



ட்ரை ஃப்ரூட்ஸ்…

உலர் திராட்சை - 50 கிராம்
டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்
பேரிச்சம் பழம் - 25 கிராம்
பாதாம் - 25 கிராம்
பிஸ்தா - 25 கிராம்
முந்திரி - 25 கிராம்

செய்முறை:

ட்ரை ஃப்ரூட்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய், உலர் பழங்களான உலர் திராட்சை, பேரிச்சம் பழம், டூட்டி ஃப்ரூட்டி, தேன், நாட்டுச்சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் சர்க்கரை மற்றும் வெண்ணெய் கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.

பின் தீயை அதிகரித்து, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மீண்டும் தீயை குறைத்து 20 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். இந்நேரத்தில் உலர் பழங்களானது நன்கு மென்மையாக வெந்திருக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து, அதில் 1/8 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கிளறி குளிர வைக்க வேண்டும்.

ஒரு பௌலில் தயிர், வெனிலா எசன்ஸ், மசாலா பொடி மற்றும் உலர் பழங்களின் கலவையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மைதா, 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை நன்கு சலித்துக் கொண்டு, பின் அதனை உலர் பழங்களுடன் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் மைக்ரோ ஓவனை 180 டிகிரி C-யில் சூடேற்ற வேண்டும். அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து, பின் அதில் வெண்ணெய் மற்றும் மைதாவை தடவி, அதன் மேல் கலந்து வைத்துள்ள கேக் கலவையை கொட்டி, விருப்பமிருந்தால் அதன் மேல் சிறிது தோல் நீக்கப்பட்ட பாதாமை துண்டுகளாக்கி தூவி விட வேண்டும்.

இறுதியில் அதனை மைக்ரோ ஓவனில் வைத்து, 1 மணிநேரம் 15 நிமிடம் பேக்கிங் செய்து இறக்கி, டூத் பிக் கொண்டு கேக்கின் நடுவே குத்தி எடுக்கும் போது, குச்சியில் மாவு ஒட்டாமல் இருந்தால், அதனை உடனே ஒரு ஈரமான துணியின் மேலே வைத்து, 15 நிமிடம் கழித்து, அதனை ஒரு தட்டில் தலைகீழாக தட்டி, அதன் மேல் உள்ள பட்டர் பேப்பரை எடுத்தால், முட்டை சேர்க்காத ஃப்ரூட் கேக் ரெடி!!!




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!