நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒருவர் தலையில் மீது தலைகீழாக இன்னொருவர். படைக்கப்பட்ட சாதனை

ஒரு சகோதரரின் தலையின் மீது மற்றும் ஒரு சகோதரர் தலைக் கீழாக தன்னை சமநிலைப்படுத்திக்கொள்ள இருவரும் சேர்ந்து 100 படிகளை ஏறிக்கடந்து சாதனைபடைத்துள்ளனர்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த ஜியாங் குவோக் கோ மற்றும் ஜியாங் குவோக் ஜிகய்ப் ஆகிய இரண்டு சகோதரர்களே இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

ஒரு சகோதரர் தலையில் மற்றொரு சகோதரர் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு ஏறினார்.

பின்னர் கீழே இருந்த சகோதரர் 53 வினாடிகளில் 100 படிக்கட்டுகளில் ஏறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கடந்த 23 ஆம் திகதி ஸ்பெயினில் இவர்கள் தங்கள் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 15 ஆண்டுகளாக இந்த சாதனைக்காக தாம் ஒத்திகை பார்த்து வந்ததாக சாதனை சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே 90 படிகளை 52 வினாடிகளில் ஏறி சாதனை படைத்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!