நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

2021-க்கு டூடுல் போட்டு பிரியா விடை கொடுத்துள்ள கூகுள்!

 உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் தனது தேடு பொறியான கூகுள் தளத்தில் முக்கிய நிகழ்வுகளை டூடுல் போட்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த சில மணி நேரங்களில் 2021-ஆம் ஆண்டு நிறைவு பெற உள்ள சூழலில் அதனை குறிப்பிடும் வகையிலும், 2022-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையிலும் 2021-க்கு டூடுல் போட்டு பிரியாவிடை கொடுத்துள்ளது கூகுள். 


உலக மக்களுக்கு மிகவும் சவாலானதாக நிறைந்த 2021-க்கு விடை கொடுத்து 2022-இல் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் அனைவரையும் கவரும் வகையில் க்யூட்டான டூடுல் போட்டுள்ளது கூகுள். 


அந்த டூடுலை க்ளிக் செய்தால் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது. 

புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் மக்கள் கூடி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!