நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கீங்களா? வெறும் 30 வினாடியில் தெரிந்து கொள்ளலாம் வாங்க...

மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று உடல் ஆரோக்கியம்! சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல உடல் ஆரோக்கியமாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.



நாம் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை வீட்டில் இருந்தபடியே 30 வினாடிகளில் தெரிந்து கொள்ள முடியும்!

முதல் பரிசோதனை

இந்த சோதனையில், நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் நகங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதன்படி, உங்கள் நகங்களின் வேர்களை மொத்தம் ஐந்து வினாடிகள் அழுத்தி, பிறகு விட வேண்டும். நீங்கள் விடுவித்த பிறகு, உங்கள் நகப்படுகை சிறிது நேரம் வெண்மையாக இருக்கும். மூன்று வினாடிகளுக்கு மேல் அவை வெண்மையாகத் தோன்றினால், உங்கள் இரத்த ஓட்டத்தில் சிக்கல் இருக்கலாம்.

கட்டை விரலில் வலி ஏற்பட்டால், உங்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படலாம்.

ஆள்காட்டி விரலில் ஏற்படும் வலி உங்கள் செரிமான அமைப்பில் உள்ள சிக்கலைக் குறிக்கிறது.

அதே நேரத்தில் நடு அல்லது மோதிர விரலில் ஏற்படும் வலி இருதய நோய்க்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். 

இரண்டாவது பரிசோதனை

உங்கள் இரு கைகளையும் மூடி, இறுக்கமாக வைத்து கொள்ளுங்கள். இந்த நிலையில் மொத்தம் 30 வினாடிகள் வைத்திருங்கள்.

பின்னர் உங்கள் கைகளைத் திறந்தால், உங்கள் உள்ளங்கைகள் சற்று வெண்மையாகத் தோன்றும். உங்கள் உள்ளங்கைகளுக்கு பழைய நிறம் திரும்ப எவ்வளவு நேரம் ஆகும் என்பதை இப்போது ஆராய வேண்டும்.

பழைய நிறம் திரும்புவதற்கு நேரம் எடுத்து உள்ளங்கையில் வலி ஏற்பட்டால் அது artery cirrhosis எனப்படும் கல்லீரல் நோய்க்கான அறிகுறியாகும்.



ALSO READ : நரை முடியை மீண்டும் கருகருன்னு மாத்தனுமா? இதோ சில அற்புத வழிகள்.........

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!