நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தாங்க முடியாத பொடுகு தொல்லையா? இந்த சாற்றை ஒரு துளி எடுத்து பயன்படுத்துங்க!

 இன்று பலரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று பொடுகு தொல்லை.

இதற்காக அதிக பணம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உருளைக்கிழங்கின் சாறு இருந்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுப்படலாம்.


ருளைக்கிழங்கில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு கப் உருளைக்கிழங்கு சாற்றின் மூலம், உடலில் இழந்த வைட்டமின் சி சத்தை உடனே ஈடு செய்திடலாம்.

வைட்டமின் சி சத்தானது, உடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கூந்தல் வளர்ச்சிக்கு இரும்புச்சத்து மிகவும் தேவையான ஒன்று.

அதனால் தான் கூந்தல் வளர்ச்சிக்கு உருளைக்கிழங்கு பெரிதும் பயனளிக்கிறது.  

உருளைக்கிழங்கு சாறு எப்படி செய்வது?

  1. முதலில் 2 அல்லது 3 உருளைக்கிழங்குகளை நன்கு கழுவி எடுத்துக் கொண்டு தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.
  2. தோல் சீவிய உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. வேண்டுமென்றால், உருளைக்கிழங்கை அரைக்காமல், துருவியும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.
  4. இப்போது, அரைத்த உருளைக்கிழங்கு அல்லது துருவிய உருளைக்கிழங்கை ஒரு சுத்தமான துணியில் போட்டு ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளவும்.
  5. இப்போது அந்த துணியில் உள்ள உருளைக்கிழங்கை பிழிந்து சாறு எடுக்கவும்.
  6. பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள், உருளைக்கிழங்கு சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தவும்.

குறிப்பு


உருளைக்கிழங்கு சாறு தயாரித்தவுடன் உடனே பயன்படுத்திட வேண்டும்.

நீண்ட நேரத்திற்கு வைத்திருந்து உருளைக்கிழங்கு சாற்றை பயன்படுத்தவே கூடாது.

சாறு எடுப்பதற்கான உருளைக்கிழங்கை நன்கு பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

பச்சை நிற உருளைக்கிழங்கு, அடர் நிற உருளைக்கிழங்கு, முளைக்கட்டிய உருளைக்கிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தவே கூடாது.


also read : உணவு மூலமே எடைக் குறைப்பு சாத்தியம்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!