Posts

Showing posts from February, 2022

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அழகிற்கு அழகு சேர்க்க சின்ன சின்ன டிப்ஸ்...

Image
அழகிற்கு அழகு சேர்க்க சின்ன சின்ன டிப்ஸ்... பெண்கள் அழகின் மீதுள்ள அதிக அக்கறையால் பியூட்டி பார்லர் சென்று தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்கின்றனர். இதனால் அதிக பணம் செலவாவதுடன், ரசாயனம் கலந்த க்ரீம்களால் முகத்தில் அலர்ஜியும் ஏற்படுகிறது. அதனால், வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு என்றும் அழகுடன் எப்படி இருப்பது என்பதை இங்கே பார்க்கலாம். நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும். இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கற்றாழை ஜெல்லை கண்களில் உள்ள கருவளையங்களின் மீது அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வர கருவளையங்கள் மறையும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந

உங்கள் உடல் எடை விரைவாக குறைய தினமும் இரவில் இந்த பானம் குடியுங்கள்!

Image
உங்கள் உடல் எடை விரைவாக குறைய தினமும் இரவில் இந்த பானம் குடியுங்கள்! உடல் பருமன் பிரச்சனைக்கு எவ்வளவோ தீர்வுகள் உள்ளன. ஆனால் அனைத்தும் அனைவருக்குமே பொருந்தும் என்று கூற முடியாது. சிலருக்கு சில வழிகள் நல்ல மாற்றத்தைக் கொடுத்தாலும், இன்னும் சிலருக்கு எவ்வித மாற்றத்தையும் கொடுக்காமல் இருக்கும். அதுவும் இயற்கை வழிகளின் மூலம் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தால், அதன் பலன் தாமதமாகத் தான் கிடைக்கும் என்பதை ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களால் கடுமையான டயட் இருக்க முடியாதா? எளிய வழியில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்படியெனில், நம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அன்றாட ம் சாப்பிடுவதுடன், உடற்பயிற்சியில் தவறாமல் ஈடுபடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பானத்தை ஒருவர் தினமும் இரவில் குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். சரி, இப்போது அந்த பானம் என்னெவென்று காண்போம். தேன்   நம் அனைவருக்கும் தேன் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று எனத் தெரியும். இதில் உள்ள மருத்துவத் தன்மையால் தான் ஆயுர்

முடி அளவுக்கு அதிகமாக கொட்டுகின்றதா? இந்த ஒரே ஒரு பொருள் செய்யும் அற்புதம்

Image
மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உங்கள் தலைமுடியை பளபளப்பாக மாற்றும். ஆம், நீங்கள் படித்தது சரிதான்.  ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் கூறுகள் நிறைந்துள்ளதால், மஞ்சள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், சருமத்தை மேம்படுத்தும். அத்துடன் மஞ்சளைப் பயன்படுத்துவதன் மூலம் முடியை எளிதாக ஆரோக்கியமாக மாற்றலாம். எனவே கூந்தலுக்கு மஞ்சள் எப்படி பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.   மஞ்சளால் முடிக்கு ஏற்படும் நன்மைகள் முடி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பொடுகு பிரச்சனை நீங்கும். வெள்ளை முடியை போக்கலாம். முடி உதிர்தல் பிரச்சனையை நீக்க உதவுகிறது.  மஞ்சள் ஹேர் மாஸ்க் செய்வது எப்படி? மஞ்சள் ஹேர் மாஸ்க் செய்ய முதலில் இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள் எடுக்க வேண்டும். அதன் பிறகு, அதில் 2 டீஸ்பூன் தேன் மற்றும் இரண்டு முட்டைகளை கலந்து பேஸ்ட் செய்யவும். இதனை தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும். இந்த ஹேர் மாஸ்க் முடியை வேரிலிருந்து வலுவூட்டுவதுடன் மென்மையாகவும் பளபளப்பாகவும் செய்கிறது.    இது தவிர வேண்டுமானால் தேங்காய் எண்ணெயில் சிறிது மஞ்சளைக் கலந்து கூந்தல

உங்களை கிருமிகளில் இருந்து காக்கும் ஜியோமி டி-சர்ட்: இந்தியாவில் அறிமுகம்

Image
இந்த டி-சர்ட்டுகள் ரூ.699 விலையில் எம்.ஐ இணையதளத்தில் கிடைக்கின்றன. ஜியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வைரஸ் எதிர்ப்பு டி-சர்ட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த டி-சர்ட்டுகளுக்கு ஜியோமி ஃபெர்பாமன்ஸ் டி சர்ட் என பெயரிடப்பட்டுள்ளது. ஆன்டி- மைக்ரோபியல் துணியால் செய்யப்பட்டுள்ள இந்த டி-சர்ட் வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகளை அண்டவிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டி- சர்ட் புற ஊதா கதிர்களை தடுக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது. இந்த ஆன்டி- மைக்ரோபியல் டி-சர்ட்டை ஒருமுறைக்கு மேல் கழுவினாலும் இதன் ஆற்றல் குறையாது. டி-சர்ட்டின் உள்ளேயும் வெளியேயும் 2 டிகிரி வெப்பநிலை வேறுபாடு இருக்கும். இதனால் இந்த டி-சர்ட்டை அணிந்து வெளியில் விளையாடுவது பாதுகாப்பானது என கூறப்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் இந்த டி-ஷர்ட்டுகள் மக்களை பாதுகாக்க உதவும் என ஜியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டி-சர்ட்டுகள் 4 அளவுகளில் வருகின்றன. இதன் உண்மை விலை ரூ.1,499 என்றும், சலுகை விலையில் ரூ.699-க்கு கிடைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி-சர்ட்டுகளை மக்கள் எம்.

குழந்தைகளை பாதுகாப்போம்...

Image
குழந்தைகள் அவர்களது பெற்றோரின் சொத்துக்களாக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு சட்ட ரீதியான உரிமைகள், பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஆகியவை தரப்பட வேண்டியது அவசியம். சர்வதேச சட்டத்தின் கீழ் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் குழந்தை என்று கருதப்படுகின்றனர். இது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு ஆகும். குழந்தைகளுக்கான உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் வரையறுக் கப்பட்டது. இவை பல நாடுகளில் சட்ட திருத்தங்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டன. இந்தியாவை பொருத்தவரை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எப்போதும் சட்டபூர்வமான உரிமைகளும், பாதுகாப்பும் பெற்ற தனிப்பிரி வினராகவே கருதப்படுகின் றனர். இதனால்தான் 18 வயதானவர் களுக்கு மட்டுமே ஓட்டு உரிமை, வாகனம் ஓட்ட உரிமம், சட்டபூர்வமான ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் உரிமை ஆகியவை வழங்கப்படுகிறது. குழந்தை பருவத்தில் கொடுமைக்கு உள்ளாவது, தவறாக பயன்படுத்தப்படுவது ஆகியவற்றில் இருந்து காப்பாற்றப்பட வேண்டியது அவசியம். இதற்கு காரணம், சமூகத்தில் பெரியவர்களை விட அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பலவீனமான நிலையில் குழந்தைகளே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் சமூகம் மட்டுமின்றி அரசாங்கங்களின்

தினமும் அலெக்சாவிடம் இதை பற்றி 11 ஆயிரம் கேள்விகளை கேட்ட இந்தியர்கள்… என்ன தெரியுமா?

Image
 ஒவ்வொரு நாளும் 11,520 முறை “அலெக்சா, காலை வணக்கம்” மற்றும் “அலெக்சா, குட் நைட்” என பயனாளர்கள் கூறுகின்றனர். அ மேசானின் அலெக்சா சாதனத்தை உபயோகிப்போரின் எண்ணிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021இல் 68 சதவீதம் அதிகரித்துள்ளது.அதில், 50 சதவீத வாடிக்கையாளர்கள் மெட்ரோ அல்லாத நகரங்களில் இருந்து வருகிறார்கள். தற்போது, அமேசான் இந்தியா அலெக்சாவின் நான்காவது ஆண்டு விழாவை இந்தியாவில் கொண்டாடுகிறது. இந்நாளில், சில புள்ளி விவரங்களை வெளியீட்டுள்ளது. சுவாரஸ்யமாக, இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலையின் போது மார்ச்-ஏப்ரல் 2021 இல், கோவிட், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான தலைப்புகள் குறித்து தினமும் 11,500 கேள்விகள் அலெக்சாவிடம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் கூற்றுப்படி, அலெக்சா தினசரி விளையாட்டு, திரைப்பட உரையாடல்கள், வார்த்தை வரையறைகள், கடினமான கணித சிக்கல்கள், வானிலை மற்றும் சமீபத்திய பங்குச் சந்தை புதுப்பிப்புகள் தொடர்பான 1.7 லட்சம் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறது. மேலும், அலெக்சா ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட் வீட்டு உபயோகப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கான 2.6 லட்

எல்லா ஷாப்பிங் மாலும் போயாச்சா… விரைவில் வருகிறது மெட்டாமால்......

Image
 மெட்டாவர்ஸில் உள்ள மெட்டாமால் தளத்தில் பயனர்கள் சொந்தமான இடங்களை வாங்கலாம். நிஜ உலகை போல், மெய்நிகர் வாயிலாக ஷாப்பிங் மாலுக்கு சென்று அங்கிருக்கும் மக்களுடன் உரையாடலாம். ஷாப்பிங் மால் அனைத்து வயது தரப்பினரும் சந்திக்கும் இடமாக மாறிவிட்டது. போர் அடிக்கிறது என ஷாப்பிங் மாலுக்கு கார் அல்லது பைக்கை எடுத்துக்கொண்டு செல்லும் கூட்டம் உள்ளது. ஆனால், நினைத்து பாருங்கள் நீங்கள் வீட்டிலிருந்தப்படியே மாலுக்கு சென்று மக்கள் உரையாடலாம், ஷாப்பிங் செய்யலாம் என சொன்னால் நம்புவீர்களா? ஆம், மெட்டாவெர்ஸ் உலகில் அது சாத்தியம். மெட்டாமால் எனப்படும் விர்ச்சுவல் மால் விரைவில் வரவுள்ளது. Metamal இன் இணை நிறுவனரான Serge Gianchandani கூறுகையில், ” ஈ-காமர்ஸ் ஷாப்பிங் தளத்தில் நீங்கள் பார்ப்பதை ஒரு சிறந்த காட்சி அனுபவத்துடன் இணைப்பதே மெட்டாவெர்ஸ் மால் யோசனையாகும். பயனர்கள் மெய்நிகர் மாலில் நுழைந்து உண்மையான நபர்களுடன் உரையாடலாம் என்றார். 2021இல் தொடங்கிய Metamall, மெய்நிகர் ரியல் எஸ்டேட் டெவலப்பராக உள்ளது. இது பயனர்களுக்கு மெட்டாவெர்ஸில் ரியல் எஸ்டேட் வாங்க உதவுகிறது. மெட்டாமால் என அழைக்கப்படும் மெட்டாவர்ஸ

சங்கடத்தை ஏற்படுத்தும் அக்குள் கருமை.. தோல் மருத்துவர் சொல்லும் தீர்வு இதோ!

Image
 கருமையான தோல் நிறம் உள்ளவர்கள், அவர்களின் தோலில்’ மெலனின் அல்லது மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அக்குள் கருமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பிக்மென்டேஷன் ஒரு பொதுவான தோல் பிரச்சனை ஆனால் அதற்கு தீர்வுகளும் உள்ளன. இது தோலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் நிறமாற்றம் மக்களை எரிச்சலடையச் செய்து அவர்களுக்கு லேசான சங்கடத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, இது அக்குளில் இருந்தால், சில ஆடைகளை அணிவதைத் தடுக்கலாம். “கருமையான தோல் நிறம் உள்ளவர்கள், அவர்களின் தோலில்’ மெலனின் அல்லது மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அக்குள் கருமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தோல் மருத்துவர் சு இன்ஸ்டாகிராமில் கூறினார். சில டியோடரண்டுகள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம், மேலும் சருமம் கருமையாவதற்கும் வழிவகுக்கும். சுவாரஸ்யமாக, முடி அகற்றும் நுட்பங்களான “ஷேவிங், பிளக்கிங் மற்றும் வாக்சிங்” போன்றவை நமது உடலால் “காயங்களாக” பார்க்கப்படலாம், இதனால் குறிப்பிட்ட பகுதியில் அதிகப்படியான மெலனின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இவை தவிர, எக்ஸ்ஃபாலியேஷன் செய்யாதது, உடலில் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணம

சிம்பிள்… இதை ஃபாலோ பண்ணுங்க; அஜீரண பிரச்னை உங்க பக்கமே வராது!

Image
 நமது செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவும், 5 முக்கிய ஆரோக்கிய குறிப்புகள். உணவு நன்றாக ஜீரணமாகாதபோது, ​​அது வீக்கம் மற்றும் குமட்டல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். செரிமான ஆரோக்கியம் முக்கியமானது, ஏனெனில் மருத்துவ நிபுணர்கள் சொல்வது போல், குடல் தான் இறுதியில் உங்கள் உடலும் மனமும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆணையிடுகிறது. ஊட்டச்சத்து நிபுணரான பக்தி கபூரின் கூற்றுப்படி, செரிமானம் சரியாக நடக்காதபோது, ​​”அதிக வாயு, வீக்கம், அதிக அமிலத்தன்மை, அடிக்கடி தளர்வான அசைவுகள் அல்லது குடல் ஒழுங்கின்மை போன்ற தெளிவான சமிக்ஞைகளை உங்கள் உடல் உங்களுக்கு தெரிவிக்கிறது”. உணவு மற்றும் உடல் செயல்பாடுகளில் சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் “உங்கள் செரிமான அமைப்பு மிகவும் திறமையாகச் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய உதவும், அதாவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்துக்களை முழுமையாக வழங்குதல் மற்றும் உறிஞ்சுதல் மற்றும் உடலின் தேவையற்ற கழிவுகளை சீராக அகற்றுதல்” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டார். எளிய முறையில் செரிமானத்தை மேம்படுத்த பின்வரும் ஐந்து புள்ளிகளை அவர் பட்டியலிட்டார்: 1. உங

90 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஆர்ட்வார்க் குட்டி... செல்லப்பெயர் என்ன தெரியுமா?

Image
90 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள ஆர்ட்வார்க் குட்டி ஈன்றுள்ளது. இங்கிலாந்தின் செஸ்டர் மிருகக் காட்சி சாலையில் உள்ல ஆர்ட்வார்க் 90 ஆண்டுகளுக்குப் பிறகு குட்டி ஈன்றுள்ளது. பெண் இனத்தைச் சேர்ந்த குட்டிக்கு டாபி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக செஸ்டர் ஜூ ட்விட்டரில் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 18ம் தேதி அன்று, செஸ்டர் ஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புதிய ஆர்ட்வார்க் ஒரு பெண் குட்டி என்பதை நிலவிற்கு மேலே நிற்பது போன்ற மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்” என பதிவிட்டுள்ளது. ஆர்ட்வார்க் எப்போதும் பிறந்த குட்டியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் என்பதால் தான் தாயிடம் இருந்து பிரித்து வைத்து பராமரித்து வருவதாகவும், மேலும் எதிர்காலத்தில் அதற்கான தனி காப்பகமும் உருவாக்கப்படும் என்றும் பூங்கா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஹாரி பாட்டர் தொடரின் ஹவுஸ்-எல்ஃப் டாபியின் உருவத்தைப் போல் இருப்பதால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெரிய காதுகள், முடி இல்லாத சுருக்கமான தோலுடனும், ராட்சத நகங்களுடனும் பெ

பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Image
உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் சில பொருட்களைப் பார்த்து, அவை ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதை புரிந்துகொள்ளலாம். அத்தகைய பொருட்கள் பற்றிய பட்டியல் இது. பிஸ்கட்டுகள் முதல் சிப்ஸ் வரை பதப்படுத்தப்பட்டு பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றை அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கெடுதல் தரும் என்று உணவியல் வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். இருப்பினும் இன்றைய நவீன வாழ்க்கை முறையில் அவற்றை சார்ந்திருக்கும் நிலை தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. கார்ன் பிளேக்ஸ், ஓட்ஸ், நார்ச்சத்துள்ள பிஸ்கட், வேர்க்கடலை, வெண்ணெய், பிரவுன் ரொட்டி உள்பட பல்வேறு பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்ட நிலையில் சந்தைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பேக்கிங் லேபிள் மீதும் அதில் உள்ள பொருட்களின் ஊட்டச்சத்து அளவுகள் கிராம் வடிவில் இடம்பெற்றிருக்கும். அதில் என்னென்ன பொருட்கள், எந்தெந்த அளவில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் சில பொருட்களைப் பார்த்து, அவை ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதை புரிந்துகொள்ளலாம். அத்தகைய பொருட்கள் பற்றிய பட்டியல் இது. 1. சர்க

தொடர் உடற்பயிற்சி உடல் எடையைக் குறைக்குமா?

Image
எடைக் குறைப்பு முயற்சியில் உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடற்பயிற்சியும் முக்கியம். அதிக கலோரிகளைக் குறைப்பதற்கு உடற்பயிற்சியே சிறந்த வழி. உடல் எடையைக் குறைப்பதற்கு, உடலுக்குத் தேவையான அளவு கலோரியை மட்டும் எடுத்துக்கொள்வது, அதிகப்படியாக சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலை பயன்படுத்துவது என இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவே, நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலில் செலவழிக்கப்பட்டது போக, மீதி உடலில் அப்படியே தங்கிவிடும். இவ்வாறு தங்கும் அதிகப்படியான ஆற்றல் கொழுப்பாக மாறும். எடைக் குறைப்பு முயற்சியில் உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடற்பயிற்சியும் முக்கியம். அதிக கலோரிகளைக் குறைப்பதற்கு உடற்பயிற்சியே சிறந்த வழி. எந்த வகையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதும், உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தில் மாற்றங்கள் நிகழும். இவை நம் உடலில் உள்ள கலோரிகளின் அளவைக் குறைப்பதற்கு உதவும். இதன் மூலம் உடல் எடை வெகுவாக குறையும். உடற்பயிற்சி என்றவுடன் கடுமையாக உடலை வருத்தி பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தின

செலவில்லாமல் சருமத்தை பராமரிக்கும் வழிகள்

Image
சரும அழகை பராமரிப்பதற்கு அதிக பணம் செலவளிக்க வேண்டிய அவசியமில்லை. தினசரி வழக்கத்தில் சில மாற்றங்களையும், சரியான முறையில் சரும பராமரிப்பையும் மேற்கொண்டாலே போதுமானது. சரும அழகை பேணுவதற்காக விலை உயர்ந்த சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை குறிவைத்து விதவிதமான அழகு சாதன பொருட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சரும அழகை பராமரிப்பதற்கு அதிக பணம் செலவளிக்க வேண்டிய அவசியமில்லை. தினசரி வழக்கத்தில் சில மாற்றங்களையும், சரியான முறையில் சரும பராமரிப்பையும் மேற்கொண்டாலே போதுமானது. அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம். 1. தலையணை உறையை மாற்றுங்கள்: பெட்ஷீட் மற்றும் தலையணை உறையை அடிக்கடி மாற்றுவது சருமத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஏனெனில் அவற்றில் எண்ணெய், பாக்டீரியா போன்ற வைரஸ் கிருமிகள், இறந்த சரும செல்கள் போன்ற அழுக்குகள் படிந்திருக்கும். அவற்றை துவைக்காமல் நாட்கணக்கில் உபயோகிக்கும்போது சருமத்தில் படர்ந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முகப்பரு, சரும வெடிப்பு, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இதனை தவிர்க

WhatsApp டெலிட் ஆன மெசேஜ்களை மீண்டும் படிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

Image
வாட்ஸ்அப் செயலியில் ஒருவர் அனுப்பிய செய்திகளை டெலிட் செய்த பிறகு மீண்டும் அதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்று புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம். வாட்ஸ்அப் அம்சம்: வாட்ஸ்ஆப்ல் பல அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்களும் அவ்வபோது அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் செயலி முக்கிய இடத்தில் உள்ளது. பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். உலகளவில் பிராந்திய மொழிகள் மூலம் 100 எம்பி கோப்புகளையும் வாட்ஸ்ஆப்-ல் எளிதாக பகிர முடியும். இதன் மூலம், PDF கள், ஆவணங்கள், விரிதாள்கள், ஸ்லைடு காட்சிகள் மற்றும் இது போன்ற பல ஆவணங்களையும் பகிர முடியும். ஆனால் வாட்ஸ்ஆப் பில் ஒருவர் நமக்கு அனுப்பிய செய்திகளை அழித்து விட்ட பிறகு அதை மீண்டும் நாம் அறிந்து கொள்வதற்கான ஆர்வம் இருக்கும். ஆனால் வாட்ஸ்ஆப்ல் இதற்கான அம்சத்தை இதுவரை அறிமுகப்படுத்தவில்லை. அழித்து விட்ட செய்திகளை நாம் அறிந்து கொள்வதற்கு என்று நாம் தனியாக மூன்றாம் தரப்பு செயலி

கணினி விசைப்பலகையில் இருக்கும் Insert எனும் விசையின் பயன்பாடு என்ன?

Image
  விசைப் பலகையின் வலது புறம் Insert எனும் ஒரு விசை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். சில கீபோர்டுகளில் இது INS எனப் பெயரிடப் பட்டிருக்கும். இதன் பயன்பாடு என்ன என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை? டைப் செய்த எழுத்துக்களை அழிப்பதற்கு Delete Key பயன்படுத்துவதைப் போல் சில வேர்ட் ப்ரொஸசர்களில் (Word Processor) எழுத்துக்களை இடையில் செருகு வதற்கு இந்த Insert கீயை அழுத்த வேண்டியிருக்கும். அல்லாவிடின் இடையில் டைப் செய்யும் எழுத்துக்கள் முன்னர் டைப் செய்த எழுத்துக்களை (OVERTYPE / Overwrite) அழித்து விடும். எம். எஸ். வர்டில் இந்த விசை எம்.எஸ்.வர்டைத் திறந்ததுமே Insert நிலையிலேயே இயல்பாக் (default) இருக்கும். Insert கீயை ஒரு முறை அழுத்தியதும் அது Overwrite நிலைக்கு மாறி விடும். அப்போது இடையில் எழுத்துக்களை டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்து விடுவதைக் காணலாம். ஒரு வேளை Insert விசையை அழுத்தியும்கூட Overwrite நிலைக்கு மாறாமலிருந்தால், File – Options – Advanced ஊடாக Editing options பகுதிக்குச் சென்று Use the Insert key to control overtype mode என்பதை தெரிவு நிலைக்கு மாற்ற வேண்டும்.    எ

நெருப்பு ஏன் எப்போதும் மேல் நோக்கியே எரிகின்றது?

Image
  சூடான காற்று குறைவான அடர்த்தியுள்ளது சுற்றியுள்ள குளிரான காற்று அதிக அடர்த்தியுள்ளது . எனவே அடர்த்தி அதிகம் உள்ள குளிரான காற்று அடர்த்தி குறைவான சூடான காத்த மேலே தள்ளுகிறது. அது போல குளிரான காற்று வெப்பம் அடையும் போது அதன் குளிர் மூலக்கூறுகள் விலகி அதன் எடை குறைகிறது.இதன் விளைவாக சூடான காற்று மேல்நோக்கி நகரும்போது ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச் செல்கிறது.   இதற்கு இயற்பியலில் வெப்பச் சலனக் கொள்கை என்று பெயர். இக்கொள்கையின்படி, நெருப்பு எரியும்போது நெருப்பின் மேல் உள்ள எரியக்கூடிய பகுதியில் உள்ள காற்றின் அடர்த்தி அதைச் சுற்றியுள்ள காற்றின் அடர்த்தியை விட குறைவாக இருக்கும். காற்று அழுத்தம் குறைவான இடத்தை நோக்கி, அருகில் உள்ள அடர்த்தியான(குளிர்ந்த) காற்று ஓடி வரும். தீ பற்றியவுடன், அதைச்சுற்றியுள்ள காற்று வெப்பமடைவதால், அந்த நெருப்பை சுற்றியுள்ள காற்று முழுவதும் சூடாகி மேலே செல்லும். அவ்வாறு செல்வதால் தான் நெருப்பு மேல்நோக்கி எரிகிறது. ALSO READ :  நடுவானில் வட்டமடித்த ஏலியன்களின் பறக்கும் தட்டு? வைரல் வீடியோவால் பரபரப்பு.........

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!