நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அதிசயம் ஆனால் உண்மை! ‘இந்த’ நாடுகளில் நுழைய முடியாமல் கொரோனா தோற்று போனது!

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.  ஆனால், உலகில் கொரோனாவினால் ஒருவர் கூட இது வரை பாதிக்கப்படாத சில பகுதிகளும் உள்ளன என்பது ஆச்சர்யம் அளிக்கிறது இல்லையா...


லகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.  ஆனால், உலகில் கொரோனாவினால் ஒருவர் கூட இது வரை பாதிக்கப்படாத சில பகுதிகளும் உள்ளன என்பது ஆச்சர்யம் அளிக்கிறது இல்லையா...

துர்க்மெனிஸ்தான்

மத்திய ஆசியாவில் உள்ள துர்க்மெனிஸ்தான், கொரோனாவை தனது நாட்டிற்கு  நுழைய அனுமதிக்கவில்லை. இதுவரை இந்த நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. நாட்டில் கூட்டம் கூடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இது தவிர, அனைவரும் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மக்கள் இதை ஆரம்பத்திலிருந்தே பின்பற்றுகிறார்கள், அதன் விளைவாக இந்த நாடு கொரோனா  காலடி எடுத்து வைக்க முடியாத நாடாக உள்ளது

நியூ Niue

Niue தெற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடு. கொரோனாவை முறியடிப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு 79 சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என WHO அறிக்கை கூறு. Niue தெற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடு.

மைக்ரோனேசியா

மேற்கு பசிபிக் பகுதியில் குடியேறிய மைக்ரோனேஷியா இன்னும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக உள்ளது. இந்த நாடு 4 தீவுகளின் கூட்டமாகும். கொரோனாவின் தொடக்கத்தில், அதன் எல்லைகளை மூடியது. இன்று WHO அதை கொரோனா இல்லாத நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.

நவ்ரு

நவ்ரு, ஆஸ்திரேலியாவுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடு. இந்த நாடு அதன் வெள்ளை மணல் கடற்கரைகளுக்கு பிரபலமானது. இது சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது என்றாலும், கொரோனா காரணமாக, அது உடனடியாக எல்லைகளை சீல் வைத்தது. இங்குள்ள மக்களில் 68 சதவீதம் பேர் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். இந்த நாடு கொரோனாவை பரவ அனுமதிக்கவில்லை.

புனித ஹெலினா

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள புனித ஹெலினா, உலகின் மிகத் தொலைதூரப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஆப்பிரிக்காவின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து 1200 மைல்கள் மற்றும் தலைநகர் ரியோவிலிருந்து 2500 மைல்கள் தொலைவில் உள்ளது. இங்கு மக்கள் தொகை 4500 மட்டுமே. இங்குள்ள மக்களில் 58 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் காலடி எடுத்து வைக்க இயலவில்லை

பிட்காயின் தீவு 

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிட்காயின் தீவு, முக்கியமாக நான்கு தீவுகளின் குழுவாகும். ஆனால் மற்ற மூன்றிற்கு பதிலாக, இந்த தீவு கொரோனா இல்லாததாக இருக்க முடிந்தது. இங்குள்ள மொத்த மக்கள் தொகை 50 மட்டுமே. இங்கு கொரோனாவால் காலடி எடுத்து வைக்க இயலவில்லை.

துவாலு தீவு

துவாலு தீவு தெற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ளது.   ஆரம்பத்திலிருந்தே, தனிமைப்படுத்தல் மற்றும் எல்லைகளைக் கடப்பது தொடர்பாக இங்கு கடுமையான விதிகள் உருவாக்கப்பட்டன, இதன் விளைவாக இந்த நாடு கொரோனா இல்லாதது நாடாலக உள்ளது

டோகெலாவ்

இன்றுவரை, தென் பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் அமைந்துள்ள டோகெலாவ்வில் ஒரு கொரோனா தொற்று பாதிப்பு கூட பதிவாகவில்லை. இந்த நாடும் கோவிட் இல்லாத நாடாக WHO அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே விமான நிலையம் இல்லை.  இந்த தீவு நாட்டிற்கு கப்பல் மூலம் மட்டுமே அடைய முடியும். இந்த நாட்டின் மக்கள் தொகை 1500 மட்டுமே என்று சொல்லலாம்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!