நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா டீ! எப்படி தயாரிப்பது?

 புதினா ஒரு அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த ஒரு கீரையாகும். புதினாவானது பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்களால் உணவு பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக நோயெதிரப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகின்றது.

அந்தவகையில் தற்போத புதினைவை டீ வடிவில் எடுத்து கொள்வது நல்லது. தற்போது இதனை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம். 

தேவையானவை

  • புதினா இலை - 7
  • தேயிலை - ஒரு டீஸ்பூன்
  • தேன் அல்லது பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்
  • பால் - கால் டம்ளர்.

செய்முறை

ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம்.

பால் சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது. தேன் அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.  



ALSO READ : ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!