நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றும் ஜூஸ்

ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முட்டைக்கோஸ் சாரை குடித்து வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு தானாகவே வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ் - 50 கிராம்
மிளகு - 10
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவைக்கு
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை

முட்டைக்கோஸை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

மிக்சியில் நறுக்கிய முட்டைக்கோஸை போட்டு அதனுடன் இஞ்சி, மிளகு போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

நன்றாக அரைந்ததும் இந்த ஜூஸை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி சாரை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு டம்ளர் அளவு தண்ணீருடன், இந்த முட்டைகோசு சாரை சேர்த்து, எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை அளவு உப்பை போட்டு, குடித்துவிட வேண்டும்.

சூப்பரான சத்தான முட்டைக்கோஸ் ஜூஸ் ரெடி.

வாரத்தில் மூன்று நாட்கள் இந்த முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்,



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!