நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தொப்பையை குறைக்கும் ‘பானங்கள்’

சில மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் போதுமான உடல் உழைப்பு இல்லாமல்போனது. உடலில் தேவையற்ற கொழுப்பால் உருவாகும் தொப்பையை கரைப்பதற்கு சிலவகை பானங்கள் கைகொடுக்கும்.
உடல் பருமன் பிரச்சினையை இப்போது நிறைய பேர் எதிர்கொண்டிருக்கிறார்கள். சில மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் போதுமான உடல் உழைப்பு இல்லாமல்போனது. அவர்கள் உணவுக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காததும் உடல் எடை அதிகரிப்புடன் தொப்பை பிரச்சினையையும் எதிர்கொள்ள வைத்திருக்கிறது. உடலில் தேவையற்ற கொழுப்பால் உருவாகும் தொப்பையை கரைப்பதற்கு சிலவகை பானங்கள் கைகொடுக்கும். அவற்றுள் எலுமிச்சையின் பங்களிப்பு முக்கியமானது.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து பருகலாம். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனும் சேர்த்துக்கொள்ளலாம். அது வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். சீரக தண்ணீரும் கொழுப்பை கரைத்து தொப்பையை குறைக்கும் தன்மை கொண்டது. ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை கலந்து இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் வடிகட்டிய நீரை பருகலாம்.

சீரக நீருக்கு பசியை கட்டுப்படுத்தும் தன்மை இருக்கிறது. அதிகம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதனை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.

கற்றாழையின் சதைப்பகுதியையும் ஜூஸாக தயாரித்து பருகலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் கைப்பிடி அளவு கற்றாழை சதைப்பகுதியுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து ஜூஸாக்கி பருகலாம். கற்றாழையில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் செரிமானத்தை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.

கிரீன் டீ பருகுவது போல கிரீன் காபியும் பருகலாம். அவைகளில் இருக்கும் குளோரோஜெனிக் அமிலம் வயிற்று பகுதியில் தங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும். உடல் எடை குறைவதற்கும் வழிவகை செய்யும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!