நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகத்தை பளிச் என்று மாற்ற வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்......

 பொதுவாக பூக்கள் பல்வேறு மருத்துவ தன்மைகளைக் கொண்டவை. இவை எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல், இயற்கையான அழகைக் கொடுக்கக்கூடியவை. 


அதிலும் பூக்கள் சரும அழகிலும் பெரிதும் உதவி புரிகின்றது. அதிலும் பால், பழங்கள், பூக்கள் கலந்து பயன்படுத்துவதால் இந்த பேஸ் பேக், சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும், பளிச் என்ற தோற்றத்தோடும் வைக்க உதவும்.

அந்தவகையில் தற்போது ஆவாரம் பூவை கொண்டு எப்படி எளியமுறையில் முகத்தை எப்படி அழகுப்படுத்தலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

  1. ஆவாரம் பூ - 15
  2. அரிசி மாவு - 1 டீஸ்பூன்
  3. மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
  4. ரோஜா பன்னீர் - தேவையான அளவு

செய்முறை

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசை போல அரைக்கவும்.

இதை முகத்திலும், கழுத்திலும் தடவி, 15 நிமிடங்கள் கழித்து மென்மையாக மசாஜ் செய்தால் சரும நிற மாற்றத்தை உணர்வீர்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்யலாம்.  

வெயிலில் செல்வதால் கருத்துப்போகும் சருமத்தை பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு ஆவாரம் பூ உதவும். 



ALSO READ : நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா டீ! எப்படி தயாரிப்பது?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!